பான் கார்டுடன் ஆதாரை எப்படி ஆன்லைனில் இணைப்பது? இறுதி நாள் நாளை!
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதிக்கட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. அரசாங்கம் விதித்துள்ள கால அவகாசம் முடிவதற்குள் எப்படி உங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது என்று பார்க்கலாம்.

செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதி நாள்
கடந்த ஆண்டு இந்திய அரசாங்கம் இந்த விதிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவித்திருந்தது. பேன் கார்டுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி தான் இதற்கு முன்பு இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்பு இந்த கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி என்று மாற்றம் செய்தது.

ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும்
பலமுறை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு மேல் நிச்சயம் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய நிதி வட்டார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளின் பயனற்றதாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
உங்கள் பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைத்துக்கொள்வதற்கான எளிய முறை, ஆன்லைனில் பதிவு செய்வது தான். ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தி எப்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்று பார்க்கலாம்.

செயல்முறை
1. இந்திய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
2.www.incometaxindiaefiling.gov.in கிளிக் செய்யுங்கள்.
3. தற்பொழுது வலைத்தளத்தில் உள்ள லிங்க் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
4. உங்களுடைய பேன் கார்டு எண்ணை என்டர் செய்யவும்.

உடனே செய்யுங்கள்
5. பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை என்டர் செய்யவும்.
6.ஆதாரில் உள்ளது போன்றே உங்கள் பெயரை 3ம் டயலாக் பாக்சில் எனத் செய்யுங்கள்.
7. கேப்சா கோடு எண்களை என்டர் செய்து லிங்க் ஆதார் கிளிக் செய்யுங்கள்.
இந்த முறைப்படி உங்களின் பான் கார்டுடன் உங்கள் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications