Just In
- 23 min ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, லாவா, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
- 15 hrs ago
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 17 hrs ago
குறைந்த விலையில் இன்று மட்டும் தான் சலுகை.. உடனே ஆர்டர் செய்யுங்கள்.. அட்டகாச Tecno போன்கள்..
- 17 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி சி30: என்னென்ன அம்சங்கள்?
Don't Miss
- News
சீனாவுக்கு எதிராக..அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸி. பிரதமர் அல்பானீசுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
- Sports
ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? எங்கே சொதப்பினார் கேப்டன் சஞ்சு சாம்சன்?
- Finance
எல்.ஐ.சி பங்குகள் வீழ்ந்தாலும் லாபத்தை கொடுக்கும் டெல்லிவரி மற்றும் ஜொமைட்டோ : எப்படி தெரியுமா?
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Movies
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்பதிவு செய்வது எப்படி?- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தலாம்., இந்த கார்டும் ஓகே!
நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். 15 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது ஜனவரி 3 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் கோவிட் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. கோவின் பதிவு தளத்தில் இந்த வயதினருக்கான தடுப்பூசிகளை பதிவு செய்ய புதிய ஸ்லாட் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவிட்-19 தடுப்பூசி ஸ்லாட்
கோவிட் தடுப்பூசி ஸ்லாட் பொதுவாக ஆதார் அட்டைகளை பயன்படுத்தியே முன்பதிவு செய்யப்படுகிறது. இருப்பினும் மாணவர்கள் தங்கள் பள்ளி அடையாள அட்டையுடன் இடங்களை பதிவு செய்யலாம். சில சிறுவர்களிடம் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் பதிவு இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸ் மற்றும் சைடோஸ் கேடில்லாஸ் ப்சைகோவி-டி ஆகியை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக்-ன் கோவாக்ஸின் மருந்து இரண்டு அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் சைடோஸ் கேடில்லாஸ் ப்சைகோவி-டி மருந்து மூன்று அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக இந்த தடுப்பூசிகள் 12 வயது மற்றும் அதற்கு மேம்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி ஸ்லாட்
குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டை முன்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டை முன்பதிவு செய்யும் செயல்முறை பெரியவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட முறையை போன்றது ஆகும். கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டுக்கு பதிவு செய்ய முதலில் கோவின் போர்ட்டலுக்கு சென்று தங்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் ஆதார் அட்டை அல்லது மாணவர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கான அடையாள அட்டை பயன்படுத்த அனுமதி அளித்த காரணம் சிலரிடம் ஆதார் அட்டை இல்லாததே ஆகும்.

அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம்
பதிவு செய்த பிறகு, கோவின் போர்ட்டலில் இருந்து மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம். இந்த இடங்களில் ஜனவரி 3, 2022 முதல் (15 முதல் 18 வயது வரை) தடுப்பூசி சந்திப்புகளை பதிவு செய்யலாம். முன்னதாக குறிப்பிட்டப்படி, தடுப்பூசி இடங்களுக்கான முன்பதிவு செயல்முறையானது பெரியவர்களுக்கு போன்றவையாகும். இந்த செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் தடுப்பூசி இடங்களை முன்பதிவு செய்யலாம்.

தேர்வு செய்ய மூன்று விருப்பங்கள்
இந்த போர்ட்டல் மூலம் மாணவர்கள் தங்கள் மாநிலம், மாவட்டம் அல்லது ஜிப் குறியீட்டின் படி அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம். கூடுதலாக கூகுள் வரைபடத்தின் மூலம் அருகலுள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம். குழந்தைகள் தேர்வு செய்ய மூன்று விருப்பங்கள் திரையில் பட்டியலிடும். பதிவு பக்கம் திறந்தவுடன், உங்கள் வீடு அல்லது பள்ளிக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்கள் போன்றவைகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம்.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
கோவின் போர்ட்டலில் பதிவுகள் நேரலையிலேயே இருக்கும் என்பதால் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் மொபைல் எண் அல்லது ஐடியை பயன்படுத்தி உமாங்க் மற்றும் ஹெல்த் சேது ஆப்ஸ்-ல் பதிவு செய்யலாம். இந்த ஆப்ஸ்களானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் போனைப் பொறுத்து, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். கோவிட் தொற்று நோயின் பரவலை தடுக்கும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு மேற்கொள்கிறது. குறிப்பாக ஒமிக்ரான் தொற்றை தடுக்க இது பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999