Just In
- 1 hr ago ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- 3 hrs ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- 3 hrs ago தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
Amazon CEO போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால் கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, கொலை நடைபெற்றது உலகக்கு தெரியவந்தது.
ஜமால் கஷோகி கொலை
இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், உலக நாடுகள் பலவும் சவுதி அரேபியாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தன. இந்தநிலையில், பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தில் பேசிய சவுதி இளவரசர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு. என்னுடைய கண்காணிப்பில்தான் இந்தக் கொலை நடைபெற்றது என்று தெரிவித்தார்.
முகமது பின் சல்மான் தெரிவிப்பு
கஷோகி மரணம் நடைபெற்று ஒரு ஆண்டு நினைவாக பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தின் ப்ரோமோவில் முகமது பின் சல்மான் மேற்கூறிய தகவலைத் தெரிவித்தார்.
வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக்
வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக் செய்யப்படுகின்றன என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பல பெரும் புள்ளிகள் உளவு பார்க்கப்படுகின்றனர் என்று வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இது உலகின் டாப் பணக்காரருக்கும் நேர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல, ஜெஃப் பெஸோஸ் உலகின் டாப் பணக்காரரும் அமேசான் நிறுவனர் என்பது அனைவரும் அறிந்ததே.
வாஷிங்டன போஸ்ட் பத்திரிக்கையின் உரிமையாளர்
அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் அதிபரும் இவர்தான். இது தான் அவரது போன் ஹேக் செய்யப்படக் காரணம் என்று கூறப்படுகிறது. வாஷிங்டன் போஸ்ட் உலக அரசியல் தலைவர்களை அஞ்சாமல் விமர்சனம் செய்யும் பிரபல நாளிதழ் ஆகும். இதையடுத்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் மீதும் அதன் உரிமையாளர் ஜெஃப் பொஸோஸ் மீது கடும் கோபம் இருக்கும்.
ஜெஃப் பொஸோஸ் செல்போன் ஹேக்
ஜெஃப் பொஸோஸ் மீது கோபமுள்ள முக்கிய உலக தலைவர்களில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முக்கியமானவர். ஆம், முகமது பின் சல்மானை விமர்சித்து வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருக்கிறது.
ஜமால் கஷோகி கொலை
முகமது பின் சல்மானை விமர்சித்து பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தொடர்ந்து வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இதையடுத்து தான் கடந்த 2018 ஆம் ஆம்டு கஷோகி சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதற்கான காரணம் தற்போது வரை முழுமையாக தெரியவில்லை.
விசாரணையில் தகவல்
இந்த நிலையில் ஜெஃப் பொஸோஸின் போனை சவுதி இளவரசர் ஹேக் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெஃப் பொஸோஸின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக தனியார் நிபுணர்கள் குழு கொண்டு அவர் விசாரணை நடத்தினார். அதில் சவுதி அரசு தான் போனை ஹேக் செய்தது என்று தெரியவந்துள்ளது. முகமது பின் சல்மானின் நேரடி கண்காணிப்பில் இது நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் லீக்
2018 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முகமது பின் சல்மானுக்கு சொந்தமான எண்ணில் இருந்து ஜெப் பெஸோஸுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ பைல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலமாகவே இந்த போன் ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்கள் திருடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வெளியான பின்னரே ஜெப் பெஸோஸை அவரது மனைவி விவாகரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அமெரிக்காவின் அரேபிய தூதரகம் அறிவிப்பு
இந்த நிலையில் ஜெப் பெஸோஸின் போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக கூறுவது அபத்தமான உண்மை என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்று அமெரிக்காவின் அரேபியா தூதரகம் அறிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470