பொது தேர்தல் வருவதை முன்னிட்டு பேஸ்புக் கொண்டுவந்துள்ள புதிய நடவடிக்கை.!
பேஸ்புக் பக்கத்தில் அரசியல் விளம்பரங்களை கிளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி என்ற பக்கம் திறக்கும், இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என விவரங்களும் இடம்பெறும்.
பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து பேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி பேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர், பின்பு அதற்காக அவர்கள் செய்துள்ள செலவு போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.
குறிப்பாக அனைத்து விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் பேஸ்புக் பக்கம் மற்றும் நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

மேலும் விளம்பரங்களை பேஸ்புக்கில் கொடுக்கும் போது மற்ற நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் போது விளம்பரதாரர் சார்பில் பேஸ்புக்கிற்கு மொபைல் எண், மின்னஞ்சல், முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் போன்றவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் அமலாகும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாத வாக்கில் வரும் என
இருந்த நிலையில் தற்போது தான் வந்துள்ளது.

பேஸ்புக் பக்கத்தில் அரசியல் விளம்பரங்களை கிளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி என்ற பக்கம் திறக்கும், இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என விவரங்களும் இடம்பெறும். குறிப்பா
விளம்பரதாரர் செலவிட்டிருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை எளிமையாக பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications