Home
News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?

ஈவிஎம் என அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ( EVM -electronic voting machine ), 1982 ல் பழைய வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பலகட்டங்களாக பரபரப்பாக நடந்துவரும் வேளையில், நம்மில் பெரும்பாலானோர் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருப்போம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?

ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகும் தலைவர்களை தேர்ந்தெடுக்க நமது பொன்னான வாக்குகளை செலுத்திய இயந்திரத்தைப் பற்றி உண்மையில் அறிந்திருக்கிறோமா? இதோ ஒரு விரிவான விரைவான அறிமுகம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

ஈவிஎம் என அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ( EVM -electronic voting machine ), 1982 ல் பழைய வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னணு சர்க்யூட்களை கொண்டு எளிமையான பெட்டியை போல தோற்றமளிக்கும் இதில், ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயர் ,கட்சி மற்றும் சின்னத்திற்கு எதிராக பொத்தானை கொண்டிருக்கும்.

வாக்காளர்கள் வெறுமனே தங்கள் விருப்ப வேட்பாளருக்கு அடுத்ததாக உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அவர்களின் வாக்குகளை செலுத்தமுடியும். மேலும் ஒருவரே பல வாக்குகள் செலுத்துவதை தடுக்கும் வகையில் இயந்திரம் தன்னை தானே லாக் செய்துகொள்ளும். அடுத்த வாக்காளர்கள் தங்களுக்கு தனித்துவமாக வழங்கப்பட்ட வாக்குஎண்ணைகளை பயன்படுத்தி மட்டுமே தங்களது வாக்குகளை செலுத்த முடியும்.

 வாக்காளர்கள் ஊடாடும் பகுதி

வாக்காளர்கள் ஊடாடும் பகுதி

இதில் முக்கியமானது என்னவெனில், வாக்காளர்கள் ஊடாடும் பகுதி "வாக்குப்பதிவு அலகு" என்று அழைக்கப்படும் வாக்குஇயந்திரத்தின் பாதி பகுதி மட்டுமே. "கட்டுப்பாட்டு அலகு" என அழைக்கப்படும் மற்றொரு பகுதியுடன் அது கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த முழு இயந்திரமும் மின்சாரம் மூலம் இயங்குவதில்லை. மின்வெட்டு காரணமாக பதிவான வாக்குகள் அழிவது அல்லது வாக்குபதிவு தாமதமாவது போன்றவற்றை தடுக்கும்விதமாக , வாக்கு இயந்திரத்தின் முழுமையான செயல்பாடுகளும் பேட்டரி மூலமே இயங்குகின்றன.

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்திற்கான தேவை?

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்திற்கான தேவை?

காகித வாக்குச்சீட்டு முறைக்கு பதிலாக ஒரு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கான மிகவும் முக்கிய மற்றும் வெளிப்படையான நன்மை, நாம் டன் காகிதத்தை வீணடிக்கவில்லை என்பது தான். இந்த செயல்முறையில் ஒரு பொத்தானை அழுத்துவதற்கு மட்டுமே வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது குழப்பமான சூழ்நிலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

விவிபேட்

விவிபேட்

2013 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை சரிபார்க்க ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபேட் (VVPat - Voter-Verified Paper Audit Trail) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய பிறகு, நேரடியாக இயந்திரத்தில் இருந்து ஒரு அச்சிடப்பட்ட ரசீதை காண முடியும். எனவே சரியான வேட்பாளர்க்கு வாக்களித்ததை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

ரூ 5000 முதல் ரூ6000

ரூ 5000 முதல் ரூ6000

இதிலுள்ள மற்றொரு நன்மை என்னவெனில், வாக்குப்பதிவு முதல் வாக்குஎண்ணிக்கை வரை அனைத்தும் வேகமாக நடைபெறும். இவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறுவதோடு மட்டுமில்லாமல் , ஒரு மின்னணு இயந்திரத்தை வாங்குவதற்கான செலவான ரூ 5000 முதல் ரூ6000 தவிர, டன் கணக்கில் பணத்தையும் இவை சேமிக்கின்றன.

எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

ஒரு இயந்திரம் 16 வேட்பாளர்களை ஏற்கும் நிலையில், ஏதாவது தொகுதியில் அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பின் ஒன்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்களை இணைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 384 வேட்பாளர்களை ஏற்கும் வகையில், ஒரு கட்டுப்பாட்டு அலகுடன் 24 வாக்குப்பதிவு அலகுகளை இணைத்துக்கொள்ளலாம்.


மேலும் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில், மீண்டும் எழுதமுடியாத அல்லது அழிக்கமுடியாத ஒரு முறை நிரலாக்க சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இணையத்தளம், யுஎஸ்பி அல்லது ப்ளூடூத் போன்றவற்றுடன் இணைக்கமுடியாத வகையில் ஏர்கேப்புடு(airgapped) வசதியுடன் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்?

பாதுகாப்பு அம்சங்கள்?

வாக்குஎண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குஎண்ணிக்கை மையத்தில், அனைத்து வாக்குபதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு அலகுகளையும் தேர்தல் அதிகாரிகள் ஒருங்கிணைப்பர். கண்காணிப்பாளர்களுக்கு மேசைகள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் வாக்குஎண்ணிக்கை அதிகாரிகள், மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக இருப்பார்கள்.

 20 நொடிகள்

20 நொடிகள்

வாக்குஎண்ணும் அலகுகள் மட்டும் மேசைகளுக்கு கொண்டு வரப்படும். வாக்குகள் பதிவான தரவுகள் எந்த விதத்திலும் மாற்றப்படாத வகையில் தடுக்க வாக்குபதிவு அலகுகள் கொண்டுவரப்படாது. இது 10 ஆண்டுகள் வரை தரவுகளை சேமித்து வைக்கும் திறனுடையது. வாக்குபதிவு முடிந்தவுடன் சீல் வைக்கப்படும் இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கையின் போது சீல் உடைக்கப்பட்டு வரிசைஎண்கள் சரிபார்க்கப்படும்.


இந்த அலகில் உள்ள வாக்குஎண்ணிக்கை அம்சத்தை, வாக்குஎண்ணிக்கை மையத்தில் தனியாக இயக்கவேண்டும். ஒரு இயந்திரத்தில் ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகளை எண்ண 20 நொடிகள் ஆகும். எனினும் வாக்குஎண்ணிக்கைக்கு பின்னர் கணக்கிட, ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்கும் அனைவருக்கும் காண்பிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How EVMs Record Your Vote And Add Them All Up In Indias 2019 General Election: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X