ஏலியன்களால் நேவி மீது கோபப்படும் பைலட்கள்!
செனட் புலனாய்வு குழுவில் உறுப்பினராக உள்ள, உளவுத்துறை பாதுகாப்பிற்கான முன்னாள் துணை உதவி செயலாளர் கிறிஸ் மெல்லன், இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்.
மர்ம பறக்கும் பொருட்கள் அல்லது இராணுவத்தால் "விவரிக்கமுடியாத வானியல் நிகழ்வு" என்று அழைக்கப்படும் ஏலியன் விண்கலன்கள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றமாக, பைலைட்கள் இவற்றை காணும் போது செய்யவேண்டிய முறையான வழிமுறைகளை கடற்படை வகுத்துள்ளதாகவும், இந்த சீர்திருத்த நடவடிக்கையானது நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததாகவும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடுருவல்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் அடையாளம் காணப்படாத விமானம் ஒன்று இராணுவத்திற்கான வான்வெளியில் ஒரே மாதத்தில் அடிக்கடி பல முறை நுழைந்துள்ளதாக உள்ளூர் போர் நடவடிக்கைக்கு துணைத் தலைமை நிர்வாகத்தின் துணை தலைவரான ஜோசப் கூறியுள்ளார்.

.இது மீண்டும் நடக்காத வகையில் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்
பாதுகாப்பு பிரச்சனைகளை மேற்கோள் காட்டி, " ஒவ்வொரு அறிக்கையையும் தீவிரமாக விசாரிக்கவேண்டும்" என கூறுகிறார் ஜோசப். மேலும் அவர் கூறுகையில் "இதை அடிமட்டத்தில் இருந்து விசாரிக்க வேண்டும். யார் இதை செய்கிறார்கள், அவை எங்கிருந்து வருகிறது, அவற்றின் நோக்கம் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.இது மீண்டும் நடக்காத வகையில் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார்.
மர்ம பறக்கும் பொருட்கள்
மூத்த உளவுத்துறை அதிகாரியான லூயிஸ் எலிசண்டோ இதுதொடர்பாக கருத்து தெரிவித்தபோது, " மர்ம பறக்கும் பொருட்களை காணும் போது பின்பற்ற வேண்டிய முறையான வழிமுறைகள் தொடர்பான புதிய கடற்படை வழிகாட்டுதல்கள் , தரவுகளை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் இவை மர்ம பறக்கும் பொருட்கள் தொடர்பான பேச்சுகள் மீதுள்ள களங்கத்தை துடைக்கும். கடற்படை கடந்த தசாப்தங்களில் செய்த மிகப்பெரிய ஒற்றை முடிவு இது" எனவும் பாராட்டியுள்ளார்.

அறியாமை மூலம் பாதுகாப்பு என்பதை நம்பவில்லை
செனட் புலனாய்வு குழுவில் உறுப்பினராக உள்ள, உளவுத்துறை பாதுகாப்பிற்கான முன்னாள் துணை உதவி செயலாளர் கிறிஸ் மெல்லன், இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்.
"அறியாமை மூலம் பாதுகாப்பு என்பதை நம்பவில்லை" என்று கூறும் அவர், "ஆர்வம் மற்றும் தைரியம்" இல்லாத மற்றும் வலுவான ஏலியன் விண்கலத்தை பார்க்கும் போது அதற்கு "எதிர்வினையாற்றுவதில் தோல்வியுற்ற" உளவுத்துறை சமூகம் என தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

விமானிகள்
சில சந்தர்ப்பங்களில், விமானிகள் - பலர் பொறியியலாளர்கள் மற்றும் பட்டதாரிகளாக இருப்பவர்கள், சிறிய கோளவடிவ மர்ம பறக்கும் பொருளை பார்த்ததாக கூறுவர். மற்றவர்கள், வெள்ளை நிற டிக்டாக் வடிவ வாகனங்களை பார்த்திருக்கிறார்கள். ட்ரோன்களை தவிர, அனைத்து இயந்திரங்களும் ஆற்றலை உருவாக்க எரிபொருளை எரிக்கும். ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் காற்றை உறிஞ்சுவதும் இல்லை மற்றும் வெளியேற்றவும் இல்லை.

தொழில் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும்
"இது மிகவும் மர்மமானதாக இருக்கிறது மற்றும் அவை வேகத்தில் நமது விமானத்தை தாண்டிச் செல்கின்றன. உண்மையில் அது மிகச்சிறந்த தொழில்நுட்பம்" என்று அவர் கூறுகிறார்.
மெல்லனின் கூற்றுபடி, பிரம்மிப்பூட்டும் மற்றும் திணறடிக்கும் விமானிகள் அடையாளம் தெரியாத பறக்கும் விமானம் தொடர்பாக கூறுவுத செய்வது அவர்களின் தொழில் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். ஆனால் அவர்கள் இதுதொடர்பாக கூறும் போது, அவர்களது கூற்றுக்களை விசாரிப்பதில் கொஞ்சம் ஆர்வம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications