ஆன்லைன் ரயில் டிக்கெட்டில் இந்தி திணிப்பு சர்ச்சை? தெற்கு ரயில்வே கூறிய விளக்கம் இதுதான்.!
மக்கள் வெளியூர்களுக்கு செல்ல அதிகமாக பயன்படுத்துவது ரயில் தான், எனவே குறிப்பிட்ட நாட்களில் செல்ல வேண்டியிருப்பவர்கள், ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். குறிப்பாக ஐஆர்சிடிசி அமைப்பு ரயில் டிக்கெட்களை முன்பதிவு
செய்ய அருமையான தளங்களை வைத்துள்ளது. மக்கள் வெளியூர்களுக்கு செல்ல ஒரு மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து பயனம் செய்கின்றனர், சிலர் தட்கல் டிக்கெட்டுகளை எடுத்து பயனம் செய்கின்றனர்.

சமீபத்தில் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்வதால் குறுஞ்செய்தி இந்தியில் வருவதாக் கூறி புகார்கள்எழுந்திருந்தது. ஆனால் தற்சமயம் இதுதொடர்பாக தெற்கு ரயல்வே சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் பறிய முழுவிவரங்களையும் பார்ப்போம்.

அதாவது ரயில் பயணி ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குறுஞ்செய்தி இந்தியில் வந்ததாகவும், அதுகுறித்து மொழியை புரிந்துகொள்வதில் மிகவும் சிரமம் இருப்பதாகவும் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஐஆர்சிடிசி வெப்சைட்டில் Profile உருவாக்கும்போது. நமக்கு வரும் தகவல்கள் என்ன மொழியில் வரவேண்டும் என்பதற்கு அதில் மொழி தேர்வுசெய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இந்தி அல்லது ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் தற்போது ஏழுந்துள்ள புகாரில் யாருடைய டிக்கெட் பதிவுசெய்யப்பட்டுள்ளதோ, அந்த ஐடியில் Profile உருவாக்கும்போது இந்தி மொழியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது, எனவேதான் அவருக்கு குறுஞ்செய்திகள் இந்தி மொழியில் சென்றுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டிக்கெட் முன்பதிவு செய்வதற்குமுன்பு, மொழியை தேர்வு செய்யும் போது, ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்ததால் பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் வரும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

எனவே ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை எனவும், பயணிகள் ஆன்லைனில் பதிவுசெய்யும்போது சரியான மொழியை தேர்ந்தெடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications