விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் புகைப்படம்: நாசாவின் வைரல் புகைப்படம்.!
நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அண்மையில் நாசா அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விண்வெளியில் இருந்து இமய மலையினை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தது.

அதன்படி இந்த புகைப்படத்தில், இமயத்தின் மீது பனிப்போர்வை போற்றி இருப்பது போன்று அவ்வளவு அழகாக காட்சி அளித்தது. பின்பு இந்த புகைப்படம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்த தகவலின்படி இமய மலையில் படர்ந்திருக்கும் பனியை, Long Exposure என்ற முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஞ்ஞானி ஒருவர் மிக அழகாக புகைப்படம் எடுத்திருந்தார்.

பின்பு உலகின் மிகப் பெரிய மலை உச்சியாக கருதப்படும் இமயம் ஆனது 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்திய-ஐரோப்பிய டெக்ட்டானிக் பிளேட்களின் கடுமையான மோதலின் போது உருவானதாக அறியப்படுகிறது.

மேலும் நாசா வெளியிட்ட புகைப்படத்தில் ஒளியில் மிளிரும் நகரங்களாக புது டெல்லி, லாகூர் போன்றவையும் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புகைப்படம் நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதில் இருந்து தற்சமயம் வரை 12 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது.

நாசாவின் இந்த புகைப்படத்தை கண்ட பலரும், இது ஒரு அற்புதமான மற்றும் மிகவும் அழகான புகைப்படம் என்று பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற மிகவும் அசத்தலான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக தளங்களில் நாசா வெளியிட்டு வருகிறது.
News Source: ndtv.com


Click it and Unblock the Notifications