புதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.!
உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கின்றது என்று மோடி பேசினார். மேலும் 125 கோடி மக்களின் வளர்ச்சியை யாராலும் இனி தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி: இந்திய முழுவதும் ஆகஸ்ட் 15ஐ யொட்டி சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. அரசு, தனியார் அமைப்புகள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் சுதந்திர தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகளுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பொது மக்கள், மாணவர்கள் சார்பிலும் நாடு முழுவதும் இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகின்றது என்று நினைவு கூறும் வகையில், கொடியை கையில் ஏந்தி பேரணி சென்றனர்.

பிரதமர் கொடிஏற்றினார்:
72வது சுந்ததிரதினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி அவர் முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பொது மக்கள் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாரதியார் கவிதை:
எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று மகாகவி பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தமிழில் உரையாற்றினார்.

6 வது பொருளாதார நாடு :
உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கின்றது என்று மோடி பேசினார். மேலும் 125 கோடி மக்களின் வளர்ச்சியை யாராலும் இனி தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய தொழில் நுட்பம்:
புதிய தொழில் நுட்பத்தில் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர். சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ஏற்றுக் கொண்டனர்:
ஜிஎஸ்டி அமல்படுத்தியதை பொது மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலபதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.


Click it and Unblock the Notifications