ஐபோன் எக்ஸ் பயன்படுத்தியதால் ரூ.11 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த சாம்சங்.!
எனவே இதை தொடர்ந்து சொப்சாக் சாம்சங் நிறுவனத்துக்கு 16 லட்சம் டாலர்கள் வரை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது சாம்சங்.
உலக நாடுகளில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இடையே கடுமையாக போட்டி இருக்கும் அனைவரும் அறிந்ததே. மேலும் சாம்சங்
நிறுவனம் பலமுறை ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார்களையும் பின்பு வழக்கு தொடர்வதையும் வாடிக்கையாகவே கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சாம்சங் புதிய வழக்கு இப்போது பதிவு செய்துள்ளது, அது என்னவென்றால் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் பயன்படுத்திய ஒரு பெண் மீது தான் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

சாம்சங்
சாம்சங் நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை பிரபலப்படுத்த பல விளம்பர தூதர்களாகளை அறிமுகப்படுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளது, அதன்படி சாம்சங் நிறுவனம் நியமித்த பெண் விளம்பர தூதர் மீது தான் சாம்சங் நிறுவனம் இப்போது வழக்கப்பதிவு செய்துள்ளது.

பெண் விளம்பர தூதர்
சாம்சங் நிறுவனம் நியமித்த அந்த பெண் விளம்பர தூதர் ரஷ்யாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் செனியா சொப்சாக் ஆவார். இந்த பெண் சாம்சங் நிறுவனத்துடன் செயது கொண்ட ஒப்பந்தத்தை
மீறம் வகையில் பொது இடங்களில் ஐபோன் எக்ஸ் மாடலை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

16 லட்சம் டாலர்கள்
எனவே இதை தொடர்ந்து சொப்சாக் சாம்சங் நிறுவனத்துக்கு 16 லட்சம் டாலர்கள் வரை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது சாம்சங். குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதும், பின்பு பொது நிகழ்ச்சிகளில் ஐபோனை
பயன்படுத்தியதாக சாம்சங் நிறுவனம்.

ஒப்பந்தத்தின் படி
விளம்பர தூதர்கள் ஒப்பந்தத்தின் படி பொது இடங்களில் போட்டி நிறுவன சாதனங்களை பயன்படுத்த மாட்டோம் என குறிப்பிட்டு இருந்தால் சொப்சாக் அவர்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








