உயிருக்கு வேட்டுவைக்கும் அதிக செல்போன் பயன்பாடு: ஆய்வில் அதிர்ச்சி.!
ஏராளமான செயலிகளும் வந்து விட்டன. ஒரு சாதாரண பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கூட செயலியில் தான் ஆடர் செய்யும் நிலையில் இருக்கின்றோம். இப்படி வாழ்கை செல்வதால், நாம் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வ
செல்போனை அதிகம் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி.!
நாம் பெரும்பாலும் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வருகின்றோம். இன்றை யுகத்தில் செல்போன்கள் இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏராளமான செயலிகளும் வந்து விட்டன. ஒரு சாதாரண பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கூட செயலியில் தான் ஆடர் செய்யும் நிலையில் இருக்கின்றோம்.
இப்படி வாழ்கை செல்வதால், நாம் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வருகின்றோம். இதனால் ஆயுள் குறையும் என்று புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

செல்போன்கள் உலகம்:
இன்றைய செல்போன்களால் உலகம் சுறுங்கிவிட்டது போல் நாம் உணர்கின்றோம். அதில் உள்ள தொழில்நுட்பங்களும் ஏராளமானதாக இருக்கின்றது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளால் நாம் மற்ற நாட்டினருடன் நட்புற கொண்டு வருகின்றோம். பல்வேறு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதால் உலகம் சுருங்கி விட்டது.

மன அழுத்தம்:
நவீன யுகத்தில் வாழும் நாம் செல்போன்களை நம் உடலின் ஒரு பகுதியாகவே கருத தொடங்கிவிட்டோம். அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவது மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகளுக்கு வித்திடுவதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

செல்போன் பயன்பாடு :
ஒவ்வொருமுறையும் செல்போன்களில் சமூக வலைதளம் உள்ளிட்ட பிற செயலிகளை பயன்படுத்தும் போதும் ஒருவித மன அழுத்தத்தை உணரும் நாம், சில நிமிடங்களிலேயே மீண்டும் செல்போனை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன

உடலில் பிரச்னை:
இவ்வாறு தொடர்ச்சியாக செல்போன் திரையில் பிரதிபலிக்கும் ஒளியை தொடந்து பார்த்துக்கொண்டிருப்பதால் ஹார்மோன் ரீதியிலான மாற்றங்களும் நிகழ்ந்து, சீரற்ற இதயத்துடிப்பு, சர்க்கரை வியாதி மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கும் ஏற்படுகின்றன.

மக்கள் தொகையை விட அதிகம்:
இதனிடையே உலகில் உள்ள மக்கள் தொகையை விட அதிகளவு செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது என உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு தக்கலாம்:
இரவு தூங்கும் போதும் செல்போனை அருகே சற்று தள்ளி வைத்தல் வேண்டும். தேவையில்லாத நேரங்களிலும் பயன்படுத்தல் தவிர்த்தல் நல்லது. பூங்கா செல்லுதல், உறவினருடன் பேசுதல், யோகா, தியானம் போன்றவற்ற செய்தல்தால் நமக்கு அதிக நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








