"எப்பவும் சந்தோஷமா இருக்கணும்..!" - இதுதான் எல்லாருக்குமே ஒரு பொதுவான ஆசை, அப்படித்தானே. ஆனால், சிலருக்கு அது பேராசை, சிலருக்கு அது நப்பாசை ஆனால் இந்த புத்த துறவிக்கு அது ஒரு அன்றாடம்..!
சயுன்ஸும் சாமியும் ஒன்னு, அறியாதவன் வாயுல மண்ணு..!
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதரையும், அவரின் மகிழ்ச்சிக்கான ரகசியங்கள் என்ன, இது எப்படி சாத்தியம்,இதை எப்படி, என்ன தொழில்நுட்பம் கொண்டு கண்டுப்பிடித்தார்கள் போன்றவைகளை பற்றிதான் நாம் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!
புத்த துறவி :
மெத்யூ ரிச்சர்ட், 66 வயதான திபெத்திய புத்த துறவி..!
மரபியல் துறை :
இவர் ஒரு மரபியலரும் கூட, அதாவது, மரபியல் சார்ந்த துறையை சேர்ந்தவர்..!
ஆராய்ச்சி :
இவரைக் கொண்டு விஸ்கோன்சின் பல்கலைகழகம் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியை நடத்தியது.
மகிழ்ச்சியான மனிதர் :
அந்த ஆராய்ச்சியின்படி, இவர் தான் உலகிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கும் மனிதராம்..!
256 சென்சார் :
புத்த துறவியின் தலையில் 256 சென்சார்களை பொருத்தப்பட்டு, அவர் தியானம் செய்யும் போது அவரின் மூளை செயல்பாடு கணக்கிடபட்டது..!
காம்மா அலைகள் :
அந்த கணக்கெடுப்பின்படி அவரின் மூளை அதிகப்படியான 'காம்மா அலை'களை உற்பத்தி செய்வதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்துள்ளனர்..!
தொடர்பு :
காம்மா அலைகளானது உணர்வு நிலை, கவனம், ஞாபகசக்தி, கற்றல் போன்றவைகளோடு தொடர்பு உடையது..!
நியூரோ சயின்ஸ் :
நியூரோ சயின்ஸ் தொழில்நுட்பத்தில், இது போல் ஒன்றை யாருமே யோசித்துக் கூட பார்த்தது இல்லையாம்..!
யார் வேண்டுமானாலும் :
மூளைக்கு பயிற்சி கொடுத்தால் போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்கிறார் மெத்யூ..!
புத்தகம் :
மெத்யூ ரிச்சர்ட், 'ஹேப்பினஸ் - ஏ கைட் டு டேவலப்பிங் லைஃப்'ஸ் மோஸ்ட் இம்பார்டன்ட் ஸ்கில்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்..!