இந்தியர்களை ஆளும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்..!!
இந்திய இண்டர்நெட் பயனாளிகள் அதிகம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது, மேலும் இந்தியாவில் பிரபல சமூக வலைதளமாக ஃபேஸ்புக் திகழ்வதாக டிஎன்எஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவதில் சுமார் 56 சதவீதம் பேர் தினமும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாகவும், சுமார் 51 சதவீதம் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 2015 நிலவரப்படி ஃபேஸ்புக் இன்க் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியை மாதம் 900 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதோடு இதில் பெரும்பாலானோர் இந்திய பயனாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 5306 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 50 நாடுகளை சேர்ந்த சுமார் 60,500 பேர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications