Just In
- 6 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 6 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 7 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 8 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ஹேக்கர்கள் சதி! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!
நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த புதிய சதித் திட்டம் உருவாகிவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை ரஷ்யா, சீனா மற்றும் இரான் தொடர்புகளைக் கொண்ட ஹேக்கர்கள் ரகசியமாக நோட்டமிட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்பொழுது எச்சரித்துள்ளது.
தேர்தலை சீர்குலைக்க முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2016ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஜனநாயக கட்சியின் பிரச்சாரத்தை குறிவைத்துச் சீர்குலைத்த அதே ஹேக்கர் குழு மீண்டும் தனது தாக்குதலை இந்த ஆண்டும் தனது கைவரிசையைக் காட்டும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் மீதும் ஹேக்கர்களின் கவனம்
தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு ரஷ்யா, சீனா மற்றும் இரான் ஹேக்கர் குழுக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று தெருவுக்குப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் ஆகிய இருவரின் மீதும் ஹேக்கர்களின் கவனம் அதிகமுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.
200க்கும் அதிகமான அமைப்புகளை குறிவைத்த ஹேக்கர்கள்
ஸ்ட்ரோண்டியம் என்ற குழுவைச் சேர்ந்த ரஷ்ய ஹேக்கர்கள் இதுவரை சுமார் 200க்கும் அதிகமான அமைப்புகளைக் குறிவைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. இதில் உள்ள பல அமைப்புகள் அனைத்தும் இரண்டு கட்சியுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, இதே ஹேக்கர்கள்தான் பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மீதும் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மக்களின் இணையக் கணக்குகள் ஹேக்
ரஷ்ய ராணுவ புலனாய்வுத் துறையான, ஜி.ஆர்.யு உடன் இணைந்ததாகக் கூறப்படும் சைபர் தாக்குதல் பிரிவான ஃபேன்ஸி பியர்தான் ஸ்ட்ரோண்டியம் என்று அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.கடந்த 2016ம் ஆண்டின் தேர்தலின் போது எப்படி மக்களின் இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதோ, அதேபோல், ஸ்ட்ரோண்டியம் குழுவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தங்களின் ஹேக்கிங் முயற்சியை இந்த ஆண்டும் தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
இவர்களின் செயல்பாடுகள் உளவுத் தகவல்களைத் திருடி, தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேக்கர்களின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470