உஷார்.! ஏடிஎம் கார்டு ரீடர் & கீபோர்டு கீலாக்கர் பயன்படுத்தி மோசடி.!
தற்போது ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் கார்டு ரீடர் & கீபோர்டு கீலாக்கர் பயன்படுத்தி மோசடி.!
ஏடிஎம். எந்திரங்களின் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் அதில் ஸ்கிம்மர் கருவியை ரகசியமாக பொருத்தி ஏடிஎம். கார்டுகளை நகல் எடுத்து விடுகிறார்கள். மேலும் போலி கார்டுகளை தயாரித்து இந்த நூதன கொள்ளையில் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடிக்கின்றனர்.
மும்பை கொலாபா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி போலீஸ்காரர்களின் சம்பள பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
உங்கள் கணக்கிலிருந்து பனத்தை திருட அல்லது போலி கார்டை உருவாக்க அவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது. உங்கள் டெபிட் அல்ல்து கிரெடிட் கார்டு எண்ணும் அதன் பின் உள்ள ஏடிஎம் எண் மற்றும் உங்கள் பெயர் இவ்வளவு தான் இது இருந்தால் உங்கள் கார்டு போன்ற போலி கார்டை உருவாக்க முடியும் என்கின்றனர் சைபர் செக்கியூரிட்டி வல்லுனர்கள்.
தற்போது ஏடிஎம் கார்டு ரீடர் ஸ்லாட் மற்றும் கீபோர்டு கீலாக்கர் போன்றவற்றை பயன்படுத்தி ஏடிஎம் மிக எளிமையாக ஹேக்கிங் செய்யப்படுகிறது. அவை எப்படி ஹேக்கிங் செய்யப்படுகிறது என பார்ப்போம்.

ஏடிஎம் கார்டு ரீடர்:
படத்தில் காட்டப்படும் அசல் கார்டு ஸ்லாட்டில் ஏடிஎம் கார்டு ரீடர் ஸ்லாட்டை நிறுவப் பயன்படுகிறது.

கீபேட் லாஜர்:
கீபேட் லாஜர் சாதனத்தை பொருத்தமாட்டில் அசல் விசை பலகையில் வைக்கப்படுகிறது.

ஸ்லாட் சாதனம்:
எந்த ஒரு ஏடிஎம் அட்டையை ஸ்லாட்டில் செருகும்போது காத்திருங்கள் பின்னர் ஸ்லாட் சாதனம் அனைத்து தரவையும் வாசிக்கும். ஏடிஎம் அட்டை உரிமையாளர் பெயர்இ சி.வி.வி.இ வங்கி கணக்கு இந்த அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்போன்ற அனைத்தையும் தெரிவிக்கும்.

பின் நம்பர்:
பின்பு ஏதேனும் ஒருவர் ஏடிஎம் வந்து பணம் எடுக்கும் போது, அந்த நபர் பின் விவரங்களை சேகரித்துவைத்துக் கொள்ளும் அந்தவிசைப்பலகை.

ஆன்லைன்:
இப்போது அட்டையின் எல்லா விவரங்களையும் பெற்றால் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்துக்கும் பயன்படுத்தமுடியும். மிக எளிமையாக பணத்தை எடுத்துப்பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications