மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமுறை.!
தமிழக அரசு சார்பில், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தாண்டு மாணவர்களுக்கு 15 லட்சம் 53 ஆயிரம் மடிக் கணினிகள் வழங்க தயார் நிலையில் உள்ளன. இதை விநியோகி
தமிழக அரசு சார்பில், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றது.இந்நிலையில் இந்தாண்டு மாணவர்களுக்கு 15 லட்சம் 53 ஆயிரம் மடிக் கணினிகள் வழங்க தயார் நிலையில் உள்ளன.

இதை விநியோகிக்க ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15.53 இலசம் மடிக்கணினிக்கள்:
2017-2018ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வழங்க 15.53 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் தயார் நிலையில் இருக்கின்றது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கல்வி அலுவகளுக்கு மடிக்கணினி:
இந்த மடிக்கணினிகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்களக்கு வழங்கும் பணி தீவிரமாக நடக்கின்றது. மடிக்கணிகள் பெறும் பள்ளிகள் உரிய பாதுகாப்புடன் வைத்து, மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

எல்காட் அனுமதி வேண்டும்:
இந்த மடிக்கணினிகளை எல்காட் நிறுனத்தின் அனுமதி பெற்ற பின்னரே ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மடிக்கணினிகளை மாற்ற வேண்டும்.

உத்தரவுக்கு பிறகு விநியோகம்:
மடிக்கணினிகளை, கல்வித்தகவல், மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) உள்ள தரவுகளின் படியே மாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பார்கோட் பதிவு:
தொடர்ந்து பள்ளி வரும் உண்மையான மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேயண்டும், மடிக்கணினிகளை வழங்க முன் சரிபார்த்து, உரிய முறையில் வழங்கி பதிவேட்டில் பார்கோடை மாணவரின் பெயருக்கு நேராக பதிவு செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு எச்சரிக்கை:
மடிக்கணினிகளை முறைகேடாக வழங்கும் பள்ளிகள் மீதும், கல்லி அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு திட்ட செயலாக்கதுறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications