போர்கப்பல் அணிவகுப்பு:இந்தியாவை இணைந்த சீனா-பாகிஸ்தானை கழற்றி விட்டது!
சீனாவில் போர் கப்பல் அணி வகுப்பு நடக்கின்றது. இதில் சுமார் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இரண்டு போர் கப்பல்களுடன் இந்தியா குஷியாக பங்கேற்கின்றன. ஆனால், சீனாவின் மிகவும் நடப்பு நாடான பாகிஸ்தான் மட்டும்
சீனாவில் போர் கப்பல் அணி வகுப்பு நடக்கின்றது. இதில் சுமார் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இரண்டு போர் கப்பல்களுடன் இந்தியா குஷியாக பங்கேற்கின்றன.

ஆனால், சீனாவின் மிகவும் நடப்பு நாடான பாகிஸ்தான் மட்டும் இந்த கப்பல் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. காரணம் இது தான்.

சீனா கப்பல் படை அணி வகுப்பு :
சீனாவில் கப்பல்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணி வகுப்பு இன்று முதல் வரும் 26ம் தேதி வரை நடக்கின்றது.

புதிய போர் கப்பல் அறிமுகம்:
தனது கப்பல் படையை பலப்படுத்த புதிய ரக நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட பல புதிய போர் கப்பல்களை இந்த நிகழ்ச்சியல் சீனா அறிமுகம் செய்கின்றது.

10 நாடுகள் பங்கேற்பு:
சீனாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் இந்த போர் கப்பல் அணி வகுப்பில், இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் 20 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன என்று சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவின் 2 போர் கப்பல்:
இந்தியா சார்பில் இரண்டு போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. இதற்காக ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி கப்பல்கள் அந்நாட்டின் குவிங்டவோ (Qingdao) துறைமுகத்திற்கு சென்றடைந்தன.

சீனா-பாகிஸ்தான் நட்பு நாடு :
சீனாவும் பாகிஸ்தானும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கின்றன. வர்த்தகம், அணு ஆயுதம், தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கி வருகின்றது.

பாகிஸ்தான் பங்கேற்கவில்லை:
சீனாவில் நடக்கும் போர் விமான கண்காட்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

காரணம்:
இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதால் சீனாவும் தற்போது ஒரு சில விஷயங்களில் தவிர்த்து வருகின்றனது.மேலும், சீனாவின் போர் கப்பல்களையே ஒரு புறம் பாகிஸ்தான் பயன்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications