தேர்தல் பறக்கும் படையை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிப்பு.!
ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்திற்காக ஓட்டு போடுவதாக மிகச்சிறந்த தலையாய கடமையாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் பணிகளுக்கு தொழில்நுட்பங்களை தேர்தல் தலைமை ஆணையம் செய்து வருகின்றது.
இந்தியாவின் தோர்தல் திருவிழா தற்போது களை கட்டியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம் கடந்து இதை திருவிழாவாக பார்க்கின்றனர்.

ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்திற்காக ஓட்டு போடுவதாக மிகச்சிறந்த தலையாய கடமையாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தேர்தல் நடத்தும் பணிகளுக்கு தொழில்நுட்பங்களை தேர்தல் தலைமை ஆணையம் செய்து வருகின்றது.

தமிழக தேர்தல்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஆர்எஸ் கண்காணிப்பு:
தேர்தல் பறக்கும் படைகளை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

புகார் பெற செயலி:
சி விஜில் செயலி மற்றும் தொலைப்பேசி வாயிலாக பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கையின் போது தேர்தல் பறக்கும் படையின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டுப்பட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு சாவடிகளுக்கு வெப் கேமராக்கள்:
அதேபோல், வாக்குப்பதிவு மையங்களை வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்க மற்றொரு கட்டுப்பாட்டு அறையும் தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை இதன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல் தினத்தன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications