Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வோடபோன் வரி விவகாரம்.! 2 வாரம் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு.!
வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் வோடபோன் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹட்சிசன் என்ற மற்றொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை 1,100 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. இதற்குவேண்டி ரூ.22 ஆயிரத்து 100 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வோடபோனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் இதை எதிர்த்து சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்பு வோடபோன் செயலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பின்பு சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோனுக்கு
சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா, என்று கடந்த மாதம் 7-ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் ராஜிவ் சஹாய் எண்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
பின்பு மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, மத்திய அரசின் அதிகார குழு இன்னும் கூடாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே முடிவு எடுக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் வந்த தகவலின்படி வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த 2020-ம் ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த 2021 ஆண்டின் துவகத்தில் அதன் கட்டணங்களை 15 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பயனர்களால் ஏற்படும் இழப்புகளை சரி செய்வது மற்றும் சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சில காரணங்களில் ஏதாவது ஒன்றுதான் வரவிருக்கும் விலை உயர்விற்கான காரணமாக இருக்கலாம்.
மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஏர்டெல் நிறுவனமும் பின்பற்றக்கூடும் என்று ET டெலிகாமின் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இருந்தபோதிலும் ஏர்டெல், வி போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப அவற்றின் விகிதங்களை அளவிடுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470