இந்தியாவில் எலான் மஸ்க் நிறுவனத்தின் முதல் சேவைக்கு இப்படியொரு சோதனையா? முழு விவரம்.!
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார் என்றுதான் கூறவேண்டும். மேலும் இவரின் SpaceX நிறுவனம் இந்தியாவில் அதிவேக ப்ராட்பேணட் சேவையை கொடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது எலான் மஸ்க் தனது SpaceX நிறுவனம் மூலம் பல தொழில்நுட்ப ரீதியலான மைல்கல்களை எட்டி வருகிறார் என்றுதான்
கூறவேண்டும். அதேபோல் தனது ஸ்டார்லிங்க் சேவை மூலம் அதிகவே ப்ராட்பேண்ட் வழங்குவதற்கான ஆயத்த வேளைகளை சமீப
காலமாக எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது SpaceX நிறுவனம் ஸ்டார்லிங்க் சேவைக்கான ப்ரீ ஆர்டர் சேவையை அளிக்கவும், ப்ரீ ஆர்டர்பெறவும் தடை விதிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் SpaceX நிறுவனத்தின் ஸ்டார்லிங் சேவைக்கு இதுவரை உரிமம் அளிக்கவில்லை. எனவே இந்திய மக்கள் இந்த சேவையை பெறுவதற்கு முன்புதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் எலான் மஸ்க் தலைமையில் நடைபெற்று வரும் ஸ்டார்லிங்க் நிறுவனம், அதிவேகமான பிராட்பேண்டு சேவையை செயற்கைக்கோள் வாயிலாக வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இத்தகைய சேவையை வழங்க இருப்பதாக கூறி, அதற்காக முன்பதிவு செய்துகொள்ளுமாறு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த சேவையை பெறுவதற்காக சுமார் 5 ஆயிரம்
பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்தச் சேவையைப் பெறுவதற்காக 99 டாலர்கள்முன்பதிவுக் கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது இந்த பிராட்பேண்டு சேவையை இந்தியாவில் வழங்க அந்நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அரசால் உரிமம் பெறாத நிறுவனம் எப்படி அதன் சேவைக்கான முன்பதிவு அறிவித்து விளம்பரப்படுத்தலாம் என்று மத்திய அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதேபோல் SpaceX நிறுவனம் இந்திய அரசு அறிவித்துள்ள விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அந்த நிறுவனத்திற்கு உரிமம்வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதுவரையில் முன்பதிவு போன்ற சேவைகள் எதையும் வழங்க வேண்டாம் எனஅறிவுறுத்தியுள்ளது மத்திய அமைச்சகம்.

இருந்தபோதிலும் எலான் மஸ்க் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார் என்றுதான் கூறவேண்டும். அதாவது சமீபத்தில் ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக எலான் மஸ்க் அவர்களின் தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்தே இருக்கும்.

அதாவது டெஸ்லா நிறுவனம் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போலவே ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பின்பு டெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும்
அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும் எலான் மஸ்க் அறிவித்த தகவலின் அடிப்படையில், 5 அடி, 8 இன்ச் உயரமும் 125 பவுணடுகளும் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம்.

பின்பு இது மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையில் அதனை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த ரோபோவின் மாதிரி வடிவம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.பின்பு மணிக்கு 5 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும் எனவும், 45 பவுண்ட் எடையை இது சுமக்கவும் செய்யும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இந்த அதிநவீன ரோபோவின் முகத்தில் திரை இருப்பதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். குறிப்பாக இது போன்ற ரோபோக்கள் மூலம் மனிதர்கள் தங்களின் சலிப்பூட்டும் வழக்கமாக பணிகளில் இருந்து விடுபட முடியும் என்று எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல் சீன எலெக்ட்ரானிகஸ் தயாரிப்பாளரான சியோமி சைபர் டாக் என்றழைக்கப்படும் தனது முதல் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நிறுவனம் பல கட்டம் முன்னோக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications