மத்திய அரசு உத்தரவு : புளூ வேல் கேம் விளையாட தடை.!
இந்த புளூ வேல் கேம் விளையாட 50 நாட்கள் கொடுக்கப்படும் ஒவ்வொரு நாளும் கேமில் கொடுக்கப்பட்டுள்ள சவாலை முடித்த பின்னர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்
கூகுள்,வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பல்வேறு இணையதளங்களில் கிடைக்கும் புளூ வேல் கேம் தடை செய்ய மத்திய அரசு உத்தரவு தந்துள்ளது, அதன்படி இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து வலைதளங்களிலும் புளூ வேல் கேம் விளையாட தடை செய்துள்ளது மத்திய அரசு.
இந்த புளூ வேல் கேம் எனப்படுவது தற்கொலை சார்ந்த விளையாட்டு எனக் கூறப்படுகிறது, இந்த கேம் விளையாடுபவர்களுக்கு 50 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த கேமின் இறுதியில் தற்கொலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

50 நாட்கள்:
இந்த புளூ வேல் கேம் விளையாட 50 நாட்கள் கொடுக்கப்படும் ஒவ்வொரு நாளும் கேமில் கொடுக்கப்பட்டுள்ள சவாலை முடித்த பின்னர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது, இறுதியில் தற்கொலை செய்யும்படி கட்டளை தருகிறது இந்த ஆன்லைன் கேம்.

மத்திய அரசு:
இந்நிலையில் புளூ வேல் கேம் சுமூலம் பலர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அதையடுத்து மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்த அறிக்கையில் அனைத்து இணையதளங்களில் இந்த புளூ வேல் கேம் நீக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள்:
இந்த புளூ வேல் கேம் மூலம் பல குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளும் சோகம் தினம்தினம் அரங்கேறி வருகிறது,இதனையடுத்து உடனடியாக இந்த புளூ வேல் கேம் தடைசெய்ய வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூகுள்:
தற்சமயம் கூகுள், வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் முதலில் இந்த புளூ வேல் கேம் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications