Just In
- 3 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 4 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 5 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 5 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி!
7000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மொபைல் டவர் இணைப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை செய்தியாளர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். அதில் 44 மாவட்டங்களில் உள்ள 7000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மொபைல் டவர் இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
7000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொபைல் டவர்
ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் உள்ள 44 மாவட்டங்களில் 7000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொபைல் டவர் இணைப்பு வழங்கப்படும் என தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 4ஜி மொபைல் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த திட்டத்துக்கு ரூ.6466 கோடி மதிப்பில் செலவிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாட்டின் தொலைதூர பகுதிகளில் ரூ.33822 கோடி செலவில் 32152 கிமீ சாலைகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் இதன்மூலம் பயனடையும் எனவும் அடர்ந்த காடுகள், மலைகள் மற்றும் ஆறுகள் வழியாக சாலைகள் அமைக்கப்படும் எனவும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
செல்போன் சேவை இல்லாத பகுதிகளில் மொபைல் டவர்
ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் செல்போன் சேவை இல்லாத பகுதிகளில் மொபைல் டவர் அமைத்து சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 7287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு இந்த சேவை ஐந்தாண்டுகளுக்கான செயல்பாட்டு செலவையும் சேர்த்து ரூ.6466 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் தொலைதூர சேவை
ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் தொலைதூர சேவை கிடைக்கப்பெறாத பகுதிகளில் சிக்கலான கிராமங்களில் செல்போன் சேவை வழங்க இந்த புதிய திட்டம் உதவும் என கூறப்படுகிறது. இந்த சேவை மற்றும் திட்டத்தின் மூலம் அந்த பகுதிகளில் புதிய தொழில்நிறுவனங்களை தொடங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பம் இந்திய அறிமுகம்
5ஜி தொழில்நுட்பம் இந்திய அறிமுகம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது.
5ஜி எப்போது அறிமுகமாகும்
அடுத்த தலைமுறையாக இருக்கும் 5ஜி எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இந்த நிலைியல் 5ஜி சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சோதனையானது 6 மாதங்கள் நடைபெறும் எனவும் இது நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமம், நடுத்தர நகரம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக அனைத்து பகுதிகளிலும் தடையின்றி 5ஜி சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.
சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம்
5ஜி சோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும், பரிசோதனையில் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சோதனைகளுக்கு சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் மொபைல் பயன்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தது, தற்போது சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு விட்டன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470