5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக்? விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு.!
5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின், லாகின் விவரங்களை ஹேக்க்ர்கள் களவாட முயற்சித்தாக கடந்த செப்.28ம் தேதி பேஸ்புக் தெரிவித்திருந்தது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,
5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் கணக்குள் ஹேக் செய்ய முயற்சிகள் நடந்தது. இதுகுறித்து பேஸ்புக்கு நிறுவனத்தினம் மத்திய அரசு விளக்கம் கேட் முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் நாட்டையே தற்போது உலுக்கி வருகின்றது. மேலும் பேஸ்புக் கணக்களர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

5 கோடி கணக்குள் ஹேக்:
5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின், லாகின் விவரங்களை ஹேக்க்ர்கள் களவாட முயற்சித்தாக கடந்த செப்.28ம் தேதி பேஸ்புக் தெரிவித்திருந்தது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அந்நிறுவன சிஇஓ ஷெரில் சாண்ட்பர்க் ஆகியோரிக் கணக்குகளும் இதற்கு தப்பவில்லை.

இந்திய அக்கவுண்டு திருட்டு :
உலகளவில் அதிக கணக்குகளை வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து பேஸ்புக் நிறுவனம் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்திய பயனாளர்களின் விவரங்களும் திருடப்பட்டிருக்கலாம் என்றும் இது மிகவும் ஆழமான பாதிப்பு பிரச்னையாக இருக்க கூடும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே திருட்டு :
ஏற்கனவே அமெரிக்கா அதிபர் தேர்தலில் பயன்படுத்துவற்கான கேம்பிரிட்ஜ் அணலிட்டிகா நிறுவனத்தால் பேஸ்புக் பயனாளர்களின் விரவங்கள் முறைகேடாக அணுகப்பட்டது தொடர்பாக பூர்வாங்க சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக்கிடம் விளக்கம் கேட்கிறது:
இந்நிலையில், இதுகுறித்து பேஸ்புக்கிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பேஸ்புக் பயனாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications