ஆசிரியர் உருவாக்கிய தனி வெப்சைட்.! அரசுப் பள்ளிக்கு உதவும்.!
இப்போது வரும் ஒரு சில ஆப் வசதிகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி வடக்கு காஷ்மீரின் உரி பகுதியைச் சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசரியர் ஒருவர் பள்ளிக்கென தனியாக வெப்சைட்டை உருவாக்கியுள்ளார்.

கொரோனா பிரச்சினையால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக செல்போன் வழியே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில ஆசியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.

சில ஆசிரயர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துகின்றனர், இப்படி பள்ளிப் படிப்பு என்பது இந்த கொரோனாவால் முற்றிலும் மாறிபோயுள்ளது. பின்பு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்த நிலையில் வடக்கு காஷ்மீர் உரி பகுதியை சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கெ தனிவெப்சைட்டை உருவாக்கியுள்ளார். பின்பு ஆண்ட்ராய்டு செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

அய்சாஷ் சேக் என்ற ஆசிரியர் தான் இந்த வெப்சைட்டை சுமார் 3மாதங்களில் உருவாக்கியுள்ளார், பின்பு இதுகுறித்து
அவர் தெரிவித்தது என்னவென்றால், இதனை 15நாட்களில் உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் 3மாதங்கள்ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

பின்பு இந்த வெப்சைட் மட்டுமின்றி செயலியும் மாணவர்களுக்கு உதவியாக இருப்பதாகவும், பள்ளயின் மற்ற ஆசிரியர்களும்இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்பு இந்த வெப்சைட்டில் மாணவர் சேர்க்கைகான வசதியும் உள்ளது.

காஷ்மீரில் 2ஜி சேவை மட்டுமே வழங்கப்பட்டு இருந்து நிலையில் ஆசிரியர் இந்த வெப்சைட்டை உருவாக்கியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications