மத்திய அரசு : இந்த ஆண்டு இறுதிக்குள் 1லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி.!
தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியது என்னவென்றால் இந்த திட்டத்திற்க்காக மத்திய அரசு ரூ.3,700கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது, அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 1லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி தரும் திட்டம் இப்போது தொடங்கப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

இன்று இந்தியாவில் உள்ள அனைத்து கிராமம் முதல் நகரம் வரை இன்டர்நெட் பயன்பாடு அதிகம் தேவைப்படுகிறது, எனவே மத்திய அரசு அனைத்து இடங்களுக்கும் இந்த வைஃபை வசதியை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.5லட்சம்:
இந்தய நாடு முழுவதும் உள்ள 5.5லட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி கொண்டுவரப்படும் திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது எனமத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கிராமங்கள்:
நாடு முழுவதும் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, மேலும் இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி செய்துதரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

அருணா சுந்தரராஜன்:
தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியது என்னவென்றால் இந்த திட்டத்திற்க்காக மத்திய அரசு ரூ.3,700கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிவேக இண்டர்நெட்:
அடுத்த ஆண்டு மார்ச்(2019) மாதத்திற்க்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் வைஃபை வசதி மத்திய அரசு ஏற்படுத்தி தரும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications