நீங்களும் எலான் மஸ்க் ஆகலாம்.. இந்திய அரசின் இலவச AI கோர்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க இளைஞர்களே..
இந்திய இளைஞர்களே.. மக்களே.! நீங்களும் எலான் மஸ்க் போன்ற சிறந்த திறமைசாலியாக வேண்டுமா? AI பற்றி அணைத்து விஷயங்களையும் இலவசமாக கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், இந்த பதிவு முழுமையாக உங்களுக்கானது. உங்கள் எதிர்காலம் சிறக்க உடனே இதை படியுங்கள்.
இந்திய அரசாங்கம், அதன் இந்தியா 2.0 திட்டத்தின் (India 2.0 programme) ஒரு பகுதியாக, புதிய இலவச AI பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இலவச பாடநெறி வகுப்பு பயிற்சி, முற்றிலும் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது. ஸ்கில் இந்தியா மற்றும் GUVI மூலம் இந்த இலவச கோர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றால் இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாடநெறி AI அடிப்படைகள், AI பயன்பாடுகள் மற்றும் AI நெறிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த பாடநெறியில் பங்கேற்க முந்தைய அனுபவம் என்று எதுவும் தேவையில்லை.
இதற்கு முன் உங்களுக்கு கோடிங் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, நீங்கள் எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் விருப்பம் இருந்தால், தாராளமாக இந்த இலவச AI கோர்ஸ் இல் பங்குபெறலாம். AI தொழில்நுட்பம் பற்றி மேலும் அறிய விரும்பும் நபர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இப்போது பல மொழிகளில் அணுக கிடைக்கிறது
GUVI தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தீர்வுகளை வழங்கும் முன்னணி எட்-டெக் நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐஐடி-மெட்ராஸ் மற்றும் ஐஐஎம்-அகமதாபாத் ஆகியவற்றால் நிறுவப்பட்டது மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப திறன்களை கற்பிப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. GUVI ஆனது பரந்த அளவிலான ஆன்லைன் கோர்ஸ் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

GUVI இன் நோக்கம் இந்தியாவில் கல்வியை மேலும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் வழங்கக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதாகும். தனிநபர் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கல்வி கற்றுக்கொள்ள உரிமை உண்டு என்று நிறுவனம் நம்புகிறது. மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் GUVI தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த இலவச பாடநெறி 9 மொழிகளில் உள்ளது. GUVI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து இந்த இலவச பாடத்தை நீங்கள் துவங்கலாம். பதிவு செய்யும் போது, உங்களுக்கு ஏதேனும் முன் கோடிங் அனுபவம் உள்ளதா என்று கேட்கப்படும். உங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், நீங்கள் இந்த கோர்ஸில் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடத்திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் பிரதான், இந்திய மொழிகளில் தொழில்நுட்ப படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொழில்நுட்பக் கல்வியில் மொழித் தடைகளை நீக்குவது முக்கியம் என்றும், நாட்டின் இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு இந்தப் படிப்பு ஒரு முக்கியமான படியாகும் என்றார்.
இந்தியா 2.0 திட்டத்திற்காக, AI ஆன்லைனில் இலவசமாகவும், அதன் மூலம் நாடு முழுவதும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் வரம்பை விரிவுபடுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் தரம் மற்றும் பொருத்தம் NCVET மற்றும் IIT மெட்ராஸ் மூலம் சரிபார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர்ஸை விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








