ஸ்மார்ட்போன் தரவுகளை பாதுகாக்க மத்திய அரசு திட்டம்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் போன்றவை இந்தியாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, எனேவே ஹேக்கிங் போன்ற பல்வேறு சிக்கல்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மிக அதிகமாக உள்ளது, மேலும் வங்கி சார்ந்த பணிகளுக்கு அதிகம் பயன்படுகிறது இந்த ஸ்மார்ட்போன்கள். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது என சில நாட்களுக்கு முன்பு அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பபட்டது.
தற்போது மத்திய அரசு தெரிவித்த அறிக்கையில் ஸ்மார்ட்போன்களில் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வதிக்கப்பட இருக்கிறது.

ஸ்மார்ட்போன்கள்:
ஸ்மார்ட்போன்களில் வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் பல்வேறு டேட்டா போன்றவை அதிகம் திருடப்பட வாய்ப்பு உள்ளதாகமத்திய தொழில்நுட்ப துறையை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஹேக்கிங்:
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் போன்றவை இந்தியாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, எனேவே ஹேக்கிங் போன்ற பல்வேறு சிக்கல்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சீன ஸ்மார்ட்போன்கள்:
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலன ஸ்மார்ட்போன்கள் சீனாவை சார்ந்த நிறுவனங்கள் ஆகும், எனவே பல்வேறுஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய விதிமுறைகள் வரும் வாரத்தில் கொண்டுவருப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்:
சில நாட்களுக்கு முன்பு விவோ, சியோமி, ஒப்போ, ஒன்பிளஸ், சாம்சங், ஆப்பிள், மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சம்மன் அனுப்பபட்டது.

தகவல்கள்:
சீனா மற்றும் இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியர்களின் தகவல்திருடப்படாமல் இருப்பதற்க்கான அவசியம் அதிகம் உள்ளது.


Click it and Unblock the Notifications