ஜூன் 2015 இல் இந்தியாவின் 25 நகரங்களில் இலவச வைபை வசதி
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த 25 நகரங்களில் ஜூன் 2015 ஆம் வாக்கில் பொது வைபை வசதி அளிக்க இந்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.
[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்]
கிட்டதட்ட மூன்று முதல் நான்கு வைபை ஹாட்ஸ்பாட்களை சுமார் 25 நகரங்களில் நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சேவைகள் தேர்வு செய்யப்பட்ட பொது இடங்களில் அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக துவக்கப்பட இருக்கும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 மில்லியன் பயனாளிகளை சுற்றுலா தளங்களின் வைபை சேவைகள் மூலம் டிசம்பர் 2015க்குள் பயனடைய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
[அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள 'ஸ்கைப்']
திட்டத்திற்கான உரிமை பெற்ற மூன்று மாதங்களுக்குள் முடிக்க தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் இந்திய தொலைதொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இலவச வைபை வசதி அளிக்க இதுவரை 25 தொல்லியல் நினைவுச்சின்னங்களை அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications