21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் - ஏன்.?
ஆப்பிள் நிறுவனம், சாம்சங்,மைக்ரோமேக்ஸ், விவோ, சியோமி, ஜியோனி போன்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது,இது தவிர சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு.
இந்தியாவில் பல்வேறு நாட்டு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன, மேலும் சீனாவில் இருந்து வரும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விறப்பனை செய்யப்படுகிறது, இதையடுத்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்ற நாடுகளை சேர்ந்தவை ஆகும், அவை மிகவும் பாதுகாப்பு கொண்டவையா அல்லது இல்லையா என்பது குறித்து மத்திய அரசு இப்போது கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா:
இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்கள் தான் அதிகஅளவு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் லெனோவா, ஆப்பிள் ஐபோன் போன்றவை தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

தகவல்கள்:
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை அவற்றில் சேமிக்கும் பல தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, மேலும் அவற்றின் செயல்முறையை குறித்து உடனடியாக விளக்கும் அளிக்குமாறுமத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரவிசங்கர் பிரசாத்:
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்நிறுவனங்களுக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆப்பிள்:
ஆப்பிள் நிறுவனம், சாம்சங் மைக்ரோமேக்ஸ், விவோ, சியோமி, ஜியோனி போன்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது,இது தவிர சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு.

மத்திய அரசு:
இந்த செயல்முறையை குறித்து வரும் 28ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்தியஅரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு
உத்திரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications