சும்மா பறந்துகிட்டே வைபை யூஸ் பண்ணலாம்: மத்திய அரசு ஒப்புதல்!
விமானத்தில் வைபை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட்
விமானப் பயணிகள் தங்கள் மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஈ-ரீடர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தப்படும்போது, விமானத்தின் வைஃபை மூலம் இணைய சேவைகளை அணுக முடியும். பைலட்-இன்-கமாண்ட் அனுமதிக்கும். இந்த மின்னணு சாதனங்களை ப்ளைட் மோட் அல்லது ஏரோபிளேன் மோடில் பயன்படுத்த முடியும்.

மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள்
விமானங்கள் பறக்கும் போது இணையத்தை பயன்படுத்து குறித்து பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தன. இதையடுத்து இதனைப் பரிசீலித்த மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளது.

அனுமதியுடன் பயன்படுத்தலாம்
அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஈ ரீடர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் வைபையைப் பயன்படுத்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கும் விமான ஓட்டியிடம் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விமான விதிகள்
இதற்காக திருத்தப்பட்ட விமான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு விதிகளில் அறிவிக்கப்பட்ட விதி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications