இந்திய இளைஞர்களை மொபைல் டெவலப்பர்களாக மாற்றும் கூகுள் நிறுவனம்
இந்தியாவில் உள்ள இளம் மாணவர்களுக்கு லேட்டஸ்ட் மொபை டெக்னாலஜி குறித்த பயிற்சி வகுப்புகள் பெங்களூரில் நடத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதன் மூலம் சுமார் இரண்டு மில்லியன் இந்திய இளைஞர்கள் மொபைல் டெவலப்பர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது.

வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களை கூகுள் நிறுவனம் மொபைல் டெவலப்பர் பயிற்சிக்காக தேர்வு செய்யவுள்ளது.
இந்தியா தொழில்நுட்ப திறமைகளின் உலகளாவிய தளமாக தனது நீண்டகால நிலையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அதே நேரட்ஜ்ட்ஜொ. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இந்திய மாணவர்கள் உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர் புரடொக்ட குரூப் தொடர்பு அதிகாரி வில்லியம் ஃப்ளோலன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
கம்ப்யூட்டர் துறை மற்றும் பொறியியல் துறையில் உள்ள மாணவர்கள் இயந்திர தயாரிப்பு, ஃபயர்பேஸ், அண்ட்ராய்டு மற்றும் புரோஜெசிவ் வெப் செயலிகள் போன்ற பல தயாரிப்பு பகுதிகளுக்கு இடையிலான நுண்ணறிவுகளை பெறவுள்ளனர். கூகுளில் பயிற்சி பெற்ற சிறப்பான பயிற்சியாளர்கள் இந்த மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி தர காத்திருக்கின்றனர்.
கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர் ஸ்டூடன்ஸ் கிளப் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு புதிய பயிற்சி வகுப்புகளை தருவதன் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
இந்தியாவிலும் மொபைல் ஸ்பைசர் நிகழ்ச்சிகளிலும் அதன் பிற முயற்சிகளால், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மொபைல் டெவெலப்பர் கல்விக்கான உதவியை கூகுள் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications