இந்தியாவிலும் வெடித்தது கூகுள் மீது புகார்: சுந்தர்பிச்சைக்கு நேரம் சரியில்லையோ?
தற்போது, அவரின் சொந்த நாடான இந்தியாவிலும் கூகுள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதில் இருந்து எப்படி தப்பிக்கும் கூகுள். கூகுளின் சிஇஓ ஆன சுந்தர்பிச்சைக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண
பல்வேறு நாடுகளிலும் கூகுள் நிறுவனத்தின் மீது அவ்வப்போது அடுக்கடுக்காக புகார்கள் கொட்டி வைக்கப்படுகின்றது.
இதில் கூகுள் நிறுவனம் ஒரு சில நல்ல முடிவுகளையும் சாமர்த்தியமான பதில்களையும் கூறி தப்பித்து வருகின்றது.
உலக நாடுகளில் புகார்கள் வந்தாலும் அசால்ட்டாக அடுத்து கூகுள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை முடிவும் செய்து விடுவார்.

தற்போது, அவரின் சொந்த நாடான இந்தியாவிலும் கூகுள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதில் இருந்து எப்படி தப்பிக்கும் கூகுள்.
கூகுளின் சிஇஓ ஆன சுந்தர்பிச்சைக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புகார் கூறிய நெதர்லாந்து:
சட்டத்திற்கு புரம்பான வகையில், கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்கள் தங்களது செயலை 3ம் தரப்பினருக்கு விநியோகம் செய்து வருகின்றது. மேலும், சட்டத்திற்கு புரம்பான வகையில் மீறியுள்ளது என்று நெதர்லாந்து நுகர்வோர் மற்றும் சந்தைகளுக்கான ஆணையம் (ஏசிஎம்ஏ) விசாரிக்கப் போவதாக கூறியுள்ளது.

சந்தை விதிகளை மீறி செயல்பட்டன:
கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சந்தை விதிகளை மீறி தங்களின் நாட்டிற்கு எதிராக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் செயலிகள் விற்பனை செய்யப்படுகின்றது என்று ஏசிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 சதவீதம் கமிஷன்:
ஆப்களை விற்பனை செய்யும் நிலையில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அந்த நாட்டில் 30 சதவீதம் கொள்முதலுக்கு கமிஷன் கோருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசிஎம் கருத்து:
கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் செயலிகளை விற்பனைக்கு அநியாமாக சட்ட விதிகளை மீறுவதாகவும் ஏசிஎம் தெரிவித்துள்ளது.

விசாரணை:
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் இந்த செயல்பாடு குறித்து முழு விசாரணையும் நெதர்லாந்து அரசாங்கம் நடத்தியது.

சுந்தர் பிச்சை முடிவு:
இதில் இருந்து தப்பிக்க கூகுள் நிறுவன சிஇஓ ஒரு சில முடிவுகளையும் எடுத்தார். பிறகு நெதர்லாந்தில் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தியாவிலும் கூகுள் மீது ஆய்வு:
இந்தியாவில் ஆண்ராய்டு மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்தி தனது போட்டிகளை கட்டுப்படுத்துவதாக கூகுள் மீது வைக்கப்படும் புகார் குறித்து இந்தியா ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கொட்டப்படும் புகார்:
கூகுள் மீது தொடர்ந்து நம்பிக்கையின்மை புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தனது ஆண்ராய்டு மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்தி தனது போட்டியாளர்களை கூகுள் கட்டுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்டிராய்டு போனில் கூகுள் க்ரோம் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதால், கூகுளின் போட்டி தேடு தளங்கள் பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கட்டுப்படுத்தியதாக புகார்:
கூகுள் மீது தொடர்ந்து நம்பிக்கையின்மை புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தனது ஆண்ராய்டு மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்தி தனது போட்டியாளர்களை கூகுள் கட்டுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேடுதல் தளங்கள் பாதிப்பு:
ஆண்டிராய்டு போனில் கூகுள் க்ரோம் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதால், கூகுளின் போட்டி தேடு தளங்கள் பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து புகார் முன் வைக்கப்பட்டு வருகின்றது. இதனால் கூகுளுக்கும், சுந்தர்பிச்சைக்கும் இந்தியாவிலும் நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications