கூகுள் இலவச வை-பை : இரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட இதுதான் காரணம்..!
கூகுள் நிறுவனம், இந்திய அரசு பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் உடன் இணைத்து மாதம்தோறும் இரண்டு மில்லியன் மக்கள் பயனப்டுத்தும் வண்ணம் இலவச வைபை வசதியை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வழங்கும் என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை அறிவித்திருந்தார். உடன் வழங்கப்படும் இலவச வை-பை ஆனது செல்லுலர் நெட்வொர்க்குகளில் வழங்கப்படுவதை விட சராசரியாக 15 மடங்கு அதிகமான தரவை வழங்கும் என்றும் சுந்தர் பிச்சை அறிவித்திருந்தார்.

ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனத்தின் இலவச அதிவேக இண்டர்நெட்டிற்கு பின்னால் ஒரு நல்ல தெளிவு இருக்கிறது என்பது தான் நிதர்சனம், அதனால் தான் இந்திய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இரயில் நிலையங்கள் என்ற ஒரு இடத்தில மட்டுமே மிக நம்பகமான சக்தியை பெற முடியும். இதில் ரயில்டெல் நிறுவனத்திற்கு பெரும் பங்கு உண்டு, ஏனெனில் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மக்கள் தொகையையும் கொண்ட இடங்களின் வழியாகத்தான் இந்திய ரயில் நிலையங்கள் செல்கின்றன.

அப்படியாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் இந்திய நாட்டின் 100 நிலையங்கள் வழியாக கடந்து செல்லும் மக்கள் தொகை அளவை கற்பனை செய்தே இந்திய ரயி நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 2016-ல் மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஆரம்பித்து புனே, புவனேஸ்வர், போபால், ராஞ்சி, பாட்னா, எர்ணாகுளம் மற்றும் விசாகப்பட்டினம் உட்பட 23 மத்திய இரயில் நிலையங்களில் கூகுளின் இலவச வைபை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இது 100 ரயில் நிலையங்கள் என்ற இலக்கை கொண்ட உலகின் மிகப் பெரிய பொது வைபை திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.!
மேலும் படிக்க :
ஐபோன்களில் 'ஐ' அர்த்தம் என்னெனு தெரியுமா?
ஆப்பிளை 'துவம்சம்' செய்த சாம்சங்..!


Click it and Unblock the Notifications