Google சுந்தர் பிச்சையின் புதிய திட்டம்.! பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்ககள் ட்விட்டர் பக்கத்தில் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளை தாக்குவதற்கு முன் விரைவாகக் கண்டறிய நிறுவனம் தொழில்நுட்ப பரிசோதனையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், கூகுள் நிறுவனம் ஏற்கனவே பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளை முன்கூடியே கணிக்க தொழில்நுட்பத்துடன் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இதற்குவேண்டி நிறுவனம் முத்திரையில் பதிக்கப்பட்ட ஃபைபர் கேபிள்களை பயன்படுத்துவதாகவும்,பின்பு இந்த கேபிள்கள் சுனாமி மற்றும் பூகம்பங்கள் ஏற்படுவதற்கு முன்பு அவற்றைக் கண்டறியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் 100கி.மீ வரை எந்த இயக்கத்தையும் உணர பயன்படுத்தப்படுகின்றன, கூகுள் நிறுவனம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி கடல் மேற்பரப்பில் எந்த அசைவையும் கண்டறிய கடலில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஃபைபர் கேபிள்களைப் பயன்படுத்தவும், நிறுவனம் தனது வலைப்பதிவு இடுகையில் இதைப் பற்றிஎழுதியுள்ளதாவது, எங்களது தொழில்நுட்பம் அதிக ஃபைபர் ஆப்டிக் அமைப்புகளைக் கொண்ட சாதனங்களை நம்பியுள்ளது,எனவே அவை பெரிய அளவில் செயல்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவல்களின்படி, ஃபைபர் கேபிள்கள் கடல் மேற்பரப்பு வழியாக வெவ்வேறு கண்டங்களை இணைக்க முடியும், இணைய போக்குவரத்தின் பெரும்பகுதி இதன் மூலம் தான், கூகுளின் குளோபல் நெட்வொர்க் ஆஃப் கேபிள்கள் கடலுக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளன,
எனவே பயனர்கள் உலகெங்கிலும் குறைந்த வேகத்தில் தகவல்களைப் பகிரவும்,தேடவும், பெறவும் முடியும் என கூகுள் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கேபிள்கள் ஆப்டிகல் ஃபைபர்களால் ஆனவை மணிக்கு 204,190 கிமீ வேகத்தில் தரவை அனுப்பும். இவைஎங்கு சென்றாலும் அவற்றின் குறைபாடுகளை சரிசெய்ய டிஜிட்டல் சிக்னல் செயலி பயன்படுத்தப்படுகிறது.

அதாவது ஒளியியல் பரவலின் ஒரு பகுதியாக அவை கண்டறியப்படும்போது, ஒளி துருவமுனைப்பு நிலையில் (SOP) உள்ளது. கூகுள் தகவலின்படி கேபிளில் இயந்திர
இடையூறுகளுக்கு பதிலளிக்கும் வகையில் SOP மாற்றங்கள் நிகழ்கின்றன. இது தடைகளை கண்டறிவது நில அதிர்வு இயக்கத்தை கண்டறிய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications