கூகுள் நிறுவனத்தின் "இந்த" திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.!
அன்மையில் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆலபபெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். குறிப்பாக மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை, கரக்பூர் ஐ.ஐ.டி.இயில் படித்தவர். கடந்த, 2004ம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்பு 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியானர்.

கூகுள் க்ரோம்
மேலும் கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் இருவரும், ஆல்பபெட் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கூகுள் மற்றும் ஆல்பபெட்டின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். குறிப்பாக கூகுள் க்ரோம் என்ற தேடுதல் இணையத்தை அனைவரும் பார்க்கும்படி நம்பர் 1-ஆக மாற்றினார்.

செயற்கை நுண்ணறிவு
தற்சமயம் கூகுள் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது, அதிகாலை எழுந்து படித்தால் சாதிக்க முடியும் என்பதில்லை, நான் 7மணிக்கு எழுந்திருப்பேன். இனிப்பு பிடிக்காது என்பதால் பாயாசம் கொடுத்தாலும், அதில் கொஞ்சம் சாம்பாரைக் கலந்து கொள்வேன், அலுவலகத்தில் நடந்துகொண்டே இருப்பேன் என்பது போன்ற பல சுவாரஸ்யங்களை, அவ்வப்போது பகிரும் சுந்தர் பிச்சை,'ஆர்ட்பிஷியல் இன்டலிஜென்ஸ் - ஏ.ஐ. எனப்படும், செயற்கை நுண்ணறிவு குறித்து பேசியிருகிறார்.

உலகம் முழுவதும்
குறிப்பாக ஏ.ஐ மையங்களை உலகம் முழுவதும் திறக்க உள்ளோம், அதனுடைய பலன் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஏ.ஐ மையங்கள், அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இதில்மருத்துவம் முக்கிய இடத்தை பெறப்போகிறது.

பார்வை இழப்பை உண்டாக்கும்
கடந்த ஆண்டு சர்க்கரை கோளாறால், வழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வை இழப்பை உண்டாக்கும் டயாபடிக் டெனோபதி குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்தோம். இதைப் பற்றி முழுமையான தகவல்களை அளித்தால் பிரச்சனையை முன்கூட்டியே கணித்து, தேவையான சிகிச்சை முன்னெச்சரிக்கையை டாக்டர்களால் செய்ய முடியும் என்று அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சங்கரா மருத்துவமனைகளுடன் இணைந்து, களப் பணிகளை செய்து வருகிறோம்.

கூகுள் இயந்திரம்
மேலும் டாக்டர்கள் இல்லாத பகுதிகளில் பயிற்சி பெற்ற டாக்டர்களை நியமித்து, பரிசோதனை செய்கிறோம்,பின்பு விழித்திரை ஸ்கேன் பரிசோதனையில் கண்கள் தவிர வேறு ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளதா என்று எந்த டாக்டராலும் கணிக்க முடியாது. ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட கூகுள் இயந்திரம், அதை செய்யும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதய, ரத்த நாளங்களில் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதா என்று,கணித்து சொல்லி விடும். இதற்கான ஆய்வை செய்து, கட்டுரையை
தயாரித்து உள்ளோம். இது தொடர்பான கள ஆய்வை,கூகுள் செய்து வருகிறது.

பின்பு நோயாளிகளின் உடல் நிலையில் ஏற்பட உள்ள மாற்றங்களை முன்கூட்டியே கணித்து சொல்லும் திறனுடன், ஏஐ செயல்படும் எனறும், மேலும் நோயாளியின் நிலை அடுத்த சில மணி நேரத்தில் எப்படி மாறும், மாறலாம் என்பதை
கணிப்பது மட்டுமல்லாமல் இதே நிலையில் இருந்த வேறு நோயளிகளின் நிலைமை எப்படி மாறியது என்பதைஒப்பிட்டு சொல்லும் திறனும் இதில் இருக்கும்.


Click it and Unblock the Notifications