ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.65,000 கோடி கொடுக்கும் நிறுவனம்.!
ஆப்பிள் நிறுவனத்திற்கு சர்ச் இன்சன் நிறுவனம் செலுத்தும் ஆண்டு கட்டணம் இந்தாண்டு 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 65,000 கோடியாக இருக்கின்றது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு சர்ச் இன்சன் நிறுவனம் செலுத்தும் ஆண்டு கட்டணம் இந்தாண்டு 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 65,000 கோடியாக இருக்கின்றது.

மேலும் இந்த நிறுவனத்தின் தகவல் நமக்கு தலையை சுற்ற வைக்கின்றது. இப்படி கட்டணம் செலுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவே அந்த நிறுவனம் இவ்வாறு ஈடுபட்டுள்ளது.

சபாரி பிரவுசர்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனில் பிரவுசராக சபாரி உள்ளது. ஐபோன் பயன்பாட்டாளர்கள் இணையத்ததை சபாரி பிரவுசர் வழியே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரவுசரின் சர்ச் இன்ஜினாக தற்போது கூகுள் உள்ளது. இதறக்காக கூகுள் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது.

கூகுள் நிறுவனம்:
ஐபோன் பயன்பாட்டாளர்களை அதிகளவில் கொண்டுள்ள கூகுள், அதனை தக்க வைக்க தொடர்ந்து பல்லாயிரம் கோடிகளை வழங்கி வருகிறது. இந்தாண்டு இதற்காக கூகுள் நிறுவனம் 9 பில்லியன் டாலர்ககளை வழங்குகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.65000 கோடியாக இருக்கின்றது.

முன்னணி சர்ச் இன்ஜின் கூகுள்:
இந்த தொகை அடுத்த ஆண்டு 12 பில்லியன் டாலர்களாக அதாவது சுமார் ரூ.87,000 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டோன்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பட்டதாரிகளான லேரி பேஜ் மற்றும் செர்கிரே பிரின் ஆகியோர் 1995இல் தொடங்கிய கூகுள் தற்போது உலகின் முன்னணி சர்ச் இன்ஜினாக இருக்கின்றது.

ஆப்பிள் வாடிக்கையாளர்களால் லாபம்:
ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கூகுள் சர்ச்ஜ் இன்ஜினை பயன்படுத்துவதால் அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை கூகுள் நிறுவனம் லாபமாக பெறுகிறது என்பது குறிப்பிட தக்கது.


Click it and Unblock the Notifications