கூகுள் மேப் செய்த குளறுபடி: இந்தியர்கள் பேனர் எழுதி எதிர்ப்பு.!
மேலும், கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கூகுள் எர்த் மேப்பில் இந்தியாவில் குளறுபடி செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றது. உலகம் முழுக்க கூகுள் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கூகுள் எர்த் மேப்பில் இந்தியாவில் குளறுபடி செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூகுள் எர்த் மேப்:
உலகம் முழுவதும் கூகுள் மேப் சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி பல்வேறு வணிக நிறுவனங்கள் பொது மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.

இடத்தை தேட உதவும்:
கூகுள் எர்த் மேப்பை பயன்படுத்தி உலகம் முழுக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் வழிகாட்டியை பயன்படுத்தி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதில், மேப் வழிகாட்டியில் பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

கூகுள் மேப் குளறுபடி:
கூகுள் மேப் செய்த குளறுபடியால், சரியான வழித்தடத்தை பொதுமக்களே பேனரில் எழுதி, தொங்கவிட்ட சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.

கடற்கரைக்கு வேறு வழி:
கோவாவில் உள்ள பிரபல கடற்கரையான, பகா கடற்கரைக்குச் செல்லும் வழித்தடமானது, கூகுள் மேப்பில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூகுள் மேப்பைப் பார்த்து அந்த பீச்சுக்கு வருவோர் தவறுதலாக வேறொரு பகுதிக்கு சென்றுவிடும் சம்பவம், அடிக்கடி நடந்துள்ளது.

பேனர் எழுதி தொங்கவிட்டனர்:
இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட முடிவெடுத்த மக்கள், கூகுள் மேப் உங்களை ஏமாற்றிவிட்டது எனவும் இந்த வழியில் பகா பீச்சுக்கு செல்ல முடியாது எனவும், அது 1 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் உள்ளது எனவும் பேனரில் எழுதி அந்த சாலையில் தொங்கவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications