கைவிடப்படுகிறது : கூகிளின் லட்சிய திட்டம் ஆரா..!
ஆல்பபெட் இன்க் கூகிள் திட்டமான ஆரா, அதாவது 'மாடுலர் போன்'களை உருவாக்கும் திட்டம் கைவிடப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டமானது இரண்டு பேரால் பதிவாக்கப்பட்டுள்ளது என்பதின்கீழ் கூகுளின் மூன்றாண்டு லட்சிய திட்டமான ஆரா கைவிடப்படுகிறது.

மாற்ற பாகங்களில் இருந்த்து ஸ்மார்ட்போன்கள் உருவாக்கும் நோக்கம் கிண்ட ஆரா திட்டமானது முடித்துக்கொள்ளப்படுவதாக கடந்த வாரம் கூகுள் நிறுவனமானது அதன் பங்குதாரர்களிடம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதின் மூலம் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கும் கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மாடுலர்-போன் முன்மாதிரி வெளியிடப்பட்டு திருப்பம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நிகழ்வில், டெவலப்பர்கள் உருவாக்கிய தொலைபேசிகள் வெளியிடவும் மற்றும் அவைகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியான விற்பனையை தொடங்கவும் கூகுள் திட்டமிடப்பட்டுள்ளது.

மாடுலர் போன்கள் என்பது ஆன் மற்றும் ஆப் செய்துக்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பெறும் கூடுதல் ஸ்பீக்கர்கள், கேமரா லென்ஸ்கள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கான க்ளுகோமீட்டர் போன்ற சாதனங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பதும், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இன்க் மற்றும் லெனோவா க்ரூப் லிமிடெட் உட்பட வேறு சில தொலைபேசி தயாரிப்பாளர்கள் இவ்வகை போன்களை உருவாக்கம் செய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








