கூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா?
மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பராமரிப்பு வல்லுனர்கள் மின்னணு உடல்நலப் பதிவுகள் மற்றும் பிற நோயாளிகளின் தரவரிசைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர்.
ஒரு பெண் மார்பக புற்றுநோய் முற்றிய நிலையில் இரண்டு மருத்துவர்களிடம் சோதனை செய்தார். அவரை பரிசோதனை செய்த இரண்டு மருத்துவர்கள் ரேடியோலஜி ஸ்கேன் எடுத்து அதன் ரிப்போர்ட்டுக்களை பார்த்து கம்ப்யூட்டரின் மூலம் அவரது உடலை சோதனை செய்து அவர் 9.3 சதவிகிதம் இந்த நோயால் மரணம் அடைய வாய்பு இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் கூகுள் தனது புதிய அலாகிரதம் மூலம் அதே பெண்ணின் டேட்டாக்களை ஆய்வு செய்து அவருக்கு 175,639 டேட்டா புள்ளிகள் இருப்பதாகவும், எனவே அவர் 19.9 சதவிகிதம் மரணம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தது. கூகுள் அறிவித்தபடியே அந்த பெண் சில நாட்களில் இறந்துவிட்டார்.
இந்த பெண்ணின் மரணத்தை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்த கூகுளின் இந்த டெக்னாலஜி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பரவியது. ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் என்று கூறப்படும் ஏஐ சாப்ட்வேர் மூலம் மிக துல்லியமாக டேட்டாக்களை ஆராய்ந்து மனிதனின் மரணத்தை கூகுள் துல்லியமாக கணிக்கின்றது. மேலும் ஒரு நோயாளி எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறா வேண்டும், அவர் பிழைப்பதற்கோ அல்லது மரணம் அடைவதற்கோ எத்தனை சதவிதம் வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஏஐ சாப்ட்வேர் துல்லியமாக கணிக்கின்றது.

பிடிஎஃப்
பிடிஎஃப் பைல்களில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகள் அல்லது பழைய அட்டவணையில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டவை ஆகியவைகள் மூலம் முன்னெடுக்கக்கூடிய கூகுளின் திறனை மருத்துவ வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நரம்பியல் வல்லுனர்களுக்கு இந்த சாப்ட்வேர் அளிக்கும் துல்லியமான ரிசல்ட் மிகுந்த பலனை தரும். கூகுளின் இந்த அமைப்பு வேகமாகவும் மிகவும் துல்லியமாக ஒரு நோயாளியின் விபரங்களை சேகரிக்கின்றது.

சுகாதார பராமரிப்பு
மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பராமரிப்பு வல்லுனர்கள் மின்னணு உடல்நலப் பதிவுகள் மற்றும் பிற நோயாளிகளின் தரவரிசைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். சரியான நேரத்தில் கூகுளின் இந்த புதிய முயற்சியால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் மிக எளிதான வகையில் குறைந்த நேரத்தில் குறைந்த ஊழியர்களை கொண்டு நோயாளியை குறைந்த செலவில் குணப்படுத்த முடியும். ஆனால் தற்போதைய உயிர் காக்கும் முறைகள் அனைத்துமே அதிக செலவு உள்ளதாக தெரிகிறது

ஜெஃப் டீன்
ஸ்டேண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் நிகாம்ஷா என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'இன்றைய மருத்துவ துறையில் உள்ள 80% பணிகள் சிகிச்சை முன்னதாக செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் கூகுள் இந்த அணுகுமுறையை தவிர்க்கிறது. "நீங்கள் சமையலறையில் உங்கள் உடல்நலம் குறித்து எந்த கவலையும் இன்றி வேலை செய்யலாம்
கூகிளின் அடுத்த நிலை இந்த முன்கணிப்பு முறையை கிளினிக்குகளாக நகர்த்துகிறது, ஏஐஇன் தலைவர் ஜெஃப் டீன் மே மாதத்தில் ப்ளூம்பெர்க் நியூஸ் பத்திரிகையில் இதனை தெரிவித்தார். சில சமயம் மூளை நமது உடல்நிலை குறித்து மெதுவாக தகவல் கூறினாலும் கூகுளின் இந்த ஏஐ சாப்ட்வேர் துல்லியமாக கணித்து நமக்குள்ள நோயை அலாரம் அடித்து கூறிவிடும்

சாப்ட்வேர்
முதல்கட்டமாக இந்த ஆராய்ச்சி பல உற்சாகமான தகவல்களை கொடுத்துள்ளது. கடைசியில் கூகுள் வணிக ரீதியிலான ஒரு ஏஐ செயலியை கண்டுபிடித்துவிட்டனர் என்று கூகுள் பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஏஐ நிறுவனத்தை தொடங்கியுள்ள கூகுள் பின்னர் அதனை மேம்படுத்தி சேவையிலும் மேலும் பல சிறப்புகளை இணைத்துள்ளது. அதேபோல் குகுளின் மூளையாக செயல்பட்டு வரும் மார்க்கெட்டிங் டீம் இதற்கான புதிய முயற்சிகளாஐயும் செய்து வருகிறது.
உடல்நலத்தில் தற்போது சாப்ட்வேர் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெரிலி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி விக் பஜாஜ் என்பவர் இதுகுறித்து கூறும்போது கூகுள் மூலம் நமது உடலின் டேட்டாக்கள் மெஷின் உள்வாங்கி அனைத்து பிரச்சனைகளையும் கண்டுபிடித்துவிடுவது என்பது டெக்னாலஜியின் உச்சம் என்று கூறியுள்ளார். ஒருசிறிய பரிசோதனை மூலம் உடலில் உள்ள பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ற சிகிச்சைகளை பெறலாம்.

கூகிள் ஆய்வாளர்
இந்த ஏஐ சிஸ்டம் டாக்டர்களுக்கு ஒரு முடிவெடுக்க உடனடி உதவி செய்கிறது. மற்றொரு கூகிள் ஆய்வாளர் இதுகுறித்து கூறும்போது, 'ஏற்கனவே நோயாளிகளுக்கு தெளிவான மருத்துவ நிகழ்வுகளை இழந்துவிட்டால், நோயாளிகளுக்கு இதற்கு முன்னர் அறுவை சிகிச்சையளித்திருந்தாரா? என்பது உள்பட முக்கிய விபரங்களை டாக்டர் இந்த ஏஐ சிஸ்டம் மூலமே தெரிந்து கொள்வார். அவர் நோயாளிகளை கேட்க தேவையில்லை.
கூகிளின் ஆற்றலைப் பற்றிய அனைத்து வகையிலான சிகிச்சையின் மேம்படுத்துவதற்காக ஏஐ சிஸ்டத்தை பயன்படுத்துவதில் பெரும் சவாலும் உள்ளது. குறிப்பாக ஐபிஎம் நிறுவனம் ஏஐ சிஸ்ட மருத்துவம் செய்ய முயன்றது, ஆனால் பணத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தை மறுகட்டமைக்கும் முறைகளில் ஒருங்கிணைப்பதற்கும் முயற்சி செய்துள்ளன.

46 பில்லியன்
கூகுள் இந்த டிஜிட்டல் ஆவணங்களை தயார் செய்ய நீண்ட காலம் எடுத்து கொண்டது. சமீபத்தில் இந்த நிறுவனம் கலிபோர்னியா பல்கலை மற்றும் சான்பிராசிஸ்கோ, சிகாகோ பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 46 பில்லியன் நோயாளிகளின் டேட்டாக்கள் கிடைத்துள்ளது. கூகுளின் ஏஐ சிஸ்ட அமைப்பு, ஒவ்வொரு மருத்துவமனையிலும் முன்மாதிரிகளை உருவாக்கியது, மேலும் அனைத்து மருத்துவமனைகளுக்குமான தீர்வு இன்னும் சவாலானதாக இருக்கும்.
கூகுள் நிறுவனம் ஒரு ஆரோக்கியமான, ஆழமான தகவல்களை நமக்காக சேகரித்துள்ளது. இதுகுறித்து ஆண்ட்ரு பர்ட் என்பவர் கூறியபோது 'கூகுளும் வேறு சில நிறுவனங்களும் இந்த டேட்டாக்களை சேகரிக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் ஒரு மூலதனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கங்களும் கூகுளின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று புற்றுநோயியல் நிபுணர் சாமுவேல் வால்ன்பௌம் சமீபத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனை
கூகுள் மிகவும் கவனமாக நோயாளிகளின் விபரங்களை சேகரித்து அதனை பாதுகாப்பதில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த விபரங்கள் நோயாளிகளின் அனுமதியின்று யாருக்கும் பகிர்வதும் இல்லை. கூகுளும் அதனுடன் தொடர்பு வைத்துள்ள மருத்துவமனைகளும் நோயாளிகளின் விபரங்களை பாதுகாப்பதில் உறுதி செய்துள்ளன. இந்த உறுதியை காப்பாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் அதனை சிறப்பாக செய்து வருகிறது.
கூகுளின் இந்த சிஸ்டம் பணம் மற்றும் உயிரை பாதுகாக்கின்றது. நோயாளிகளின் விபரங்களை சேகரிப்பதில் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு மருத்துவமனை போல செயல்பட்டு அனைத்து விபரங்கள் மற்றும் தட்பவெப்பநிலை உள்பட அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளது.

தகவல்கள்
கூகிள் விட இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்வதற்கு ஒருசில நிறுவனங்கள் செய்த முயற்சிகள் சிறப்பானவை. நிச்சயமாக கூடுதல் தகவல்களை சேகரிக்க இந்த நிறுவனங்கள் முயற்சித்தன. இருப்பினும் கூகுளின் டேட்டாக்கள் அதிக அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் ஆண்ட்ராய்டு போன்கள், மக்கள் எப்படி நடந்துகொள்கின்றனர், அவர்களது மனநிலை சரிவு மற்றும் வேறு ஏதேனும் நோய்களை அளவிடுவதற்கான மதிப்புமிக்க தகவல்கள் போன்றவற்றை கண்காணிக்கின்றன.
மருத்துவ பதிவேடுகள் கூகுளின் ஏஐ சுகாதார திட்டங்களின் ஒரு பகுதியாகும். அதன் மருத்துவ மூளை கதிர்வீச்சு, கண் மருத்துவம் மற்றும் கார்டியாலஜி ஆகியவற்றிற்கான ஏஐ அமைப்புகளை முறித்துக் கொண்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு பயன்பாட்டை உருவாக்கிய கூகுள் தனது வித்தியாசமான முறையில் அதை சோதனை செய்தும் பார்த்துள்ளது.

ஏஐ தலைவர்
இந்த சோதனை தீவிர அறிவுரை குறிப்புகள் மட்டுமின்றி, தீவிர மருத்துவ ஆலோசனையும் செய்து வருகிறது. ஒரு நோயின் ஆரம்ப அறிகுறிகளுக்கு கண்களின் சித்திரங்களை திரையில் அதன் ஏஐ மென்பொருளைப் பயன்படுத்தும் சேவை இந்தியாவில் தொடங்குகிறதுஎன்று ஏஐ தலைவர் டீன் என்பவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications