சுந்தர்பிச்சையின் கணக்கை அதிரடியாக நீக்கிய கூகுள்.! இதுதான் காரணம்?
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்னை, லாரிபேஜ், செர்ஜீன் பிரின் உள்ளிட்டோர்களின் கூகுள் பிளஸ் இருந்த கணக்கு விபரங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஏன் இந்த நடவடிக்கையில் இறங்கியுள
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்னை, லாரிபேஜ், செர்ஜீன் பிரின் உள்ளிட்டோர்களின் கூகுள் பிளஸ் இருந்த கணக்கு விபரங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏன் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று பலரையும் கேள்விகேட்க வைத்துள்ளது.

அவர்களின் தனிப்பட்ட விவரங்களை நீக்க என்ன காரணமாக இருக்கும் என்று உங்களுக்கும் சந்தேகம் வரலாம்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு போட்டி:
கூகுள் பிளஸை கூகுள் நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்டாகிராமுக்கு போட்டியாக துவங்கியிருந்தது கூகுள் நிறுவனம்.
மேலும், கூகுள் பிளஸ் நிறுவனத்திற்கு போதிய அளவு பயனர்கள் கிடைக்கவில்லை. இந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த நிறுவனம் கூகுள்பிளஸை முடக்குவது என தீர்மானித்தது.

அதிரடியாக நீக்கியது:
இந்நிலையில், கூகுள் பிளஸ் நிறுவனம் சுந்தர்பிச்னை, லாரிபேஜ், செர்ஜீன் பிரின் உள்ளிட்டர்களின் கூகுள் பிளஸ் சுயவிவரங்களை அதிரடியாக நீக்கியது.

கூகுள் நிறுவனத்தில் முக்கியமானவர்கள்:
கூகுள் நிறுவனத்தில் முக்கியவமானர்களாக சுந்தர்பிச்னை, லாரிபேஜ், செர்ஜின் பிரின் உள்ளிட்டோர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். இவர்களின் கணக்கு விரங்களை அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.

நிரந்தமாக மூடுவதாக அறிவிப்பு:
கூகுள் பிளஸ் கணக்குகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதால் தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு :
கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடு இருந்தது. இதனால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்சை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

ஏப்ரல் 2ம் தேதி மூடல்:
அடுத்த மாதம் 2ம் தேதி கூகுள் பிளஸ் நிரந்தமாக மூடப்படுவதாகவும் பயனர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து கணக்குகளையும் நீக்கியுள்ளது கூகுள் பிளஸ்.


Click it and Unblock the Notifications