Home
News

தெருவில் சுற்றுவோருக்கு சும்மா 5 டாலர் வாரி கொடுக்கும் கூகுள்.!

தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுத்து பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை முக அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கும் தொழில்நுட்பத்துக்கான கள ஆய்வுக்கு கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

யாராப்பா இந்த காலத்தில் தெருவில் சுற்றுபவர்களுக்கு சும்மா அழைத்து பணம், காசு யாராச்சியும் கொடுப்பார்களா என்று நமக்குள்ளே ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

தெருவில் சுற்றுவோருக்கு சும்மா 5 டாலர் வாரி கொடுக்கும் கூகுள்.!

இந்நிலையில், நாம் வாயை திறந்து கேட்டாலே சுமார் ஒரு ரூபாய் கூட தர மறுக்கும் சிறிய பெட்டிகடைகளுக்கு மத்தியிலும், நமக்கு 5 டாலர்களை கூகுள் நிறுவனம் வழங்குகின்றது.

மறுபடியும் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. எதற்காக கூகுள் நிறுவனம் இப்படி செய்கின்றது என்று இதுகுறித்து விளக்கமாக கீழே காணலாம். இதில், கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை வழங்கி வருகின்றது. தனது பிக்சஸ் ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

 கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம் ஏதாவது சோதனைக்காவும் விளபம்பரத்திற்காக அவ்வபோது, ஏதாவது பொது மக்களுக்கு பணத்தை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் ஏராளமானோர் இந்த போட்டிகளில் பங்கேற்றும் வருகின்றனர்.

ஒரு சிறிய விளக்கத்திற்கா ஏராளமான காசு பணம் உள்ளிட்டவைகளை வழங்கி தெறிக்கவிட்டதுள்ளது கூகுள் நிறுவனம். தற்போதும் ஒரு விடயத்தை வழங்கியுள்ளது கூகுள்.

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் :

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் :

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்கவும் விற்பனையில் கலக்கி வருகின்றது.

சுந்தர்பிச்சையின் நடவடிக்கையால் தற்போது விற்பனையும் இருமடங்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் நன்கு விற்பனையாகி வருகின்றது. உலகம் முழுக்கவும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த போன்களை வாங்க பொது மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாதுகாப்பு குறைபாடு சோதனை:

பாதுகாப்பு குறைபாடு சோதனை:

இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடு இருக்கின்றதா என்று கூகுள் நிறுவனம் அவ்வபோது, சோதனை செய்து வருகின்றது. இந்நிலையில் பொது மக்கள் மத்தியில் வித்தியாசமான முறையிலும் சோதனை செய்து வருகின்றது.

முக அடையாளம்:

முக அடையாளம்:

தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுத்து பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை முக அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கும் தொழில்நுட்பத்துக்கான கள ஆய்வுக்கு கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

குறைகளை களைய நடவடிக்கை:

குறைகளை களைய நடவடிக்கை:

முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் லாக்கை திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே அமலில் இருந்தாலும் அதில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் பிக்ஸல் 4 மற்றும் பிக்ஸல் 4 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன்களில் அந்தக் குறைகளைக் களைய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

5 டாலர் வழங்கின்றது கூகுள் :

5 டாலர் வழங்கின்றது கூகுள் :

அதற்காக கூகுள் பணியாளர்கள் அமெரிக்காவில் தெருக்களில் செல்வோரிடம் சென்று இந்திய மதிப்பில் 340 ரூபாய் மதிப்புள்ள 5 டாலருக்கான சான்றை வழங்கி அவர்களின் முக அடையாளங்களைப் பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது. ஒரே நிறத்தில் உள்ளவர், வடிவமைப்பை ஒத்த உருவங்கள், இன்ஃப்ராரெட், முகத்தோற்றத்தின் ஆழத்தை நேரத்துடன் பதிவிடுவது, படம் எடுக்கும் சூழல், வெளிச்சம் என பல பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்கிறது.

Best Mobiles in India

English summary
Google For 5 dollar Off The Street: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X