வீட்டில் இருந்து வேலை செய்யும் கூகுள் ஊழியர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் பல கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா காலத்தில் சில நிறுவனங்கள் லாபாம் கிடைப்பதில்லை என்று கூறி வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த கொரோனா காரணமாக கூகுள் நிறுவனமும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதேபோன்று பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அண்மையில் தெரிவித்தது என்னவென்றால், இந்த சம்பளம் தொடர்பான ஏற்றம் இறக்கம் ஊழியர்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக இனிவரும் காலங்களில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக பேட்வுமன் என்று அழைக்கப்படும் மூத்த ஆய்வாளர் ஷி ஜெங்கலி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சில நாட்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் முதலிடத்தில் அமர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. அதாவது மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா
தொற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications