ஒமைக்ரான் வைரஸ் : ஊழியர்கள் எப்போது அலுவலகம் வர வேண்டும்? கூகுள் தகவல்?
தென் ஆப்ரிக்கா மற்றும் சில நாடுகளில் பரவி வந்த ஒமைக்ரான் எனப்படும் மோசமான கோரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் இரண்டு பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு
நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இப்போதும் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரெம் ஹோம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும் வரும் 2022 ஜனவரி 10 முதல்ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுள்நிறுவனம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக வொர்க் ஃப்ரெம் ஹோம் திட்டத்தை கைவிடுதாகவும் சொல்லி இருந்தது. ஆனால் பல நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கூகுள் நிறுவனம் அந்த முடிவை கைவிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஊழியர்கள் எப்போது அலுவலகம் வர வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என கூகுள் நிர்வாகம், ஊழியர்களிடம் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து உலகம் நாடுகள் மீண்டு வரும் நிலையில், உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் (ஒமைக்ரான்) தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி,கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது,குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

அதாவது புதிய வகை ரோபோ மாடல்களை ஆல்பாபெட்டின் X வடிவமைத்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது கூகுள்
நிறுவனத்தின் அலுவலகத்தில் தற்போது 100 ரோபோக்கள் உலாவிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தானியங்கி முறையில் இயங்கும் இவை Prototype- என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவை Everyday Robotsஎன்றுஅழைக்கப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ரோபோ மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல் புதியவகை ரோபோ மாடல்களை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டோம். பின்பு ரோபோக்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஒரு இடத்தில் எப்படி செயல்படுவது என்ற புரிதலை கற்றல் மூலமாக கொடுக்க முயன்றோம். அதேபோல் இதுவரையில் எங்களது ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள், இனி அலுவலகத்தின் சில இடங்களில் வலம் வர உள்ளன என்று தெரிவித்துள்ளார்தலைமை ரோபோ அலுவலர் Hans Peter Brøndmo.கண்டிப்பாக இந்த ரோபோக்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் தலைமை ரோபோ அலுவலர். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரோபோக்கள் எந்த மாரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எனவே இந்த
புரோகிராம்களின் அடிப்படையில் அந்த ரோபோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறது.


Click it and Unblock the Notifications