குவாண்டம் கணினி குறித்து கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை தகவல்.!
கூகுள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக “குவாண்டம் ஆதிக்க கணிணியை” அடைந்ததாகக் கூறுகின்றனர். சைகாமோர் என பெயரிடப்பட்டுள்ள அந்த 53-பிட் குவாண்டம் கணினி, உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யக்கூடிய கணக்கீட்டை வெறும் 200 நொடிகளில் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரற்ற எண்களின் வரிசையை முடிவாக வெளியிட்டுள்ளது
இந்த கணக்கீட்டால் கிட்டத்தட்ட எந்தவொரு நடைமுறை பயன்பாடும் இல்லை. இது சீரற்ற எண்களின் வரிசையை முடிவாக வெளியிட்டுள்ளது. ஒரு குவாண்டம் கணினி இயங்க வேண்டிய வழியில் இந்த சைகாமோர் உண்மையில் செயல்பட முடியும் என்பதைக் காண்பிப்பதற்காகவே இது நிகழ்த்தப்பட்டுள்ளது. பயனுள்ள குவாண்டம் கணிணிகள் இன்னும் பல வருடங்கள் தொலைவில் உள்ளன. ஏனெனில் மிகப் பெரிய தொழில்நுட்ப தடைகள் உள்ளன மற்றும் அதன் பின்னர் கூட அவை சில செயல்பாடுகளில் மட்டுமே தற்போதுள்ள கணினிகளை விட சிறப்பாக செயல்படமுடியும்.

சுந்தர் பிச்சை
ஆனால் கூட இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என கூறும் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ரைட் சகோதரர்களின் 12 விநாடிகள் இயங்கிய முதல் விமானத்துடன் இதை ஒப்பிடுகிறார். கூகுள் ஏற்கனவே 13 வருடங்களை இந்த திட்டத்தில் செலவழித்திருக்கும் நிலையில், இதை முடிக்க இன்னும் ஒரு தசாப்தம் அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம். இந்த குவாண்டம் கணிணி குறித்து சுந்தர்பிச்சை அளித்துள்ள பேட்டியை இங்கு காணலாம்.

குவாண்டம் கணிணி
குவாண்டம் கணிணி குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டுமே செய்யும் நிலையில், இதை பரவலாக்க முடியுமா?
அதிக குவாண்டம் திறனுள்ள பிழைகளை சகித்துக்கொள்ளும் குவாண்டம் கணிணிகளை உருவாக்குவதன் மூலமே, நீங்கள் அதை பொதுவானதாக மாற்றுவதுடன், மேலும் நீண்ட காலத்திற்கு அதை செயல்படுத்த முடியும் மற்றும் மிகவும் சிக்கலான வழிமுறைகளை இயக்க முடியும். ஆனால் எந்தவொரு துறையாக இருந்தால் திருப்புமுனையை சந்திக்க எங்காவது தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ரைட் சகோதரர்களின் முதல் விமானம் வெறும் 12 விநாடிகளுக்கு மட்டுமே பறந்தது மற்றும் அது எந்தவொரு முன்னுதாரணமும் இல்லை. ஆனால் ஒரு விமானம் பறப்பது சாத்தியமானது என நிரூபிக்கப்பட்டது.

பல நிறுவனங்கள் குவாண்டம் கணிணிகளை வைத்துள்ளன. ஐபிஎம்-ன் ஆன்லைன் கணிணிகளை யாரும் பயன்படுத்தலாம். அதைவிட கூகுள் கணிணி எவ்வாறு சிறந்தது?
நான் கூறவிரும்பும் முக்கியமான விசயம் எப்படி கூகுள் குழுவால் இதை செய்ய முடிந்தது என்பதுதான். இதற்கு அதிகளவு அமைப்பு பொறியியலும், அனைத்தும் படிநிலைகளிலும் பணியாற்றும் திறனும் வேண்டும். அமைப்பு பொறியியல் அடிப்படையில் இதுமிகவும் சிக்கலானது.

மதிப்புள்ள நிகழ் செயலியை அடைய ஒரேஒரு புதுமையான அல்காரிதம் மட்டுமே தேவை என்கிறது ஆய்வறிக்கை. அவை எது என்று ஏதாவது யூகம்?
குவாண்டம் பற்றிய உண்மையான உற்சாகம் என்னவென்றால், பிரபஞ்சம் அடிப்படையில் குவாண்டம் வழியில் செயல்படுகிறது. எனவே நீங்கள் இயற்கையை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.இதன் ஆரம்ப நாட்களில், குவாண்டம் மெக்கானிக்ஸ் உச்சத்தில் இருந்தபோது மூலக்கூறுகள், மூலக்கூறு செயல்முறைகளை உருவகப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. அதனால் தான் அது வலிமையானதாக இருக்கிறது. மருந்து கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அல்லது உரங்கள் -ஹேபர் செயல்முறை மூலம் உலகின் 2% கார்பன் உற்பத்தியாகிறது. இயற்கையில் இது இன்னும் திறமையாக நடைபெறுகிறது.

ஹேபர் செயல்முறை போல இந்த செயலி மேம்பட எவ்வளவு காலம் ஆகும்?
இன்னும் ஒரு தசாப்தம் கூட ஆகலாம். போதுமான அளவு இயங்கக்கூடிய குவாண்டம் கணிணியை உருவாக்க அல்லது மேம்படுத்த இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் சுந்தர் பிச்சை.


Click it and Unblock the Notifications