சுந்தர் பிச்சை : இந்தியா வருகிறார், மோடியை சந்திக்கிறார்..!
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இந்த மாதத்திற்கு பின் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியரான சுந்தர் பிச்சை உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுளின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற பின் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிராணாப் முகர்ஜி ஆகியோர்களை சுந்தர் பிச்சை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்திய மாணவர்களுடன் சந்திப்பு ஒன்றில் சுந்தர் பிச்சை கலந்து கொள்ளப்போவதாகவும் அந்த சந்திப்பு டெல்லி பல்கலை கழகத்தில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து கூகுள் இந்தியா செய்தி தொடர்பாளரிடம் தகவல் கேட்கப்பட்ட போது, சுந்தர் பிச்சையின் இந்திய வருகையை உறுதி செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழும் அனுப்பி வைக்கப்பட்டது என்பதும், அடுத்த ஆண்டு வாக்கில் கூகுள் நிறுவனம் 500 இந்திய ரயில்வே நிலையங்களில் வை-பை திட்டத்தை கட்டமைக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சுந்தர் பிச்சை சார்ந்த செய்திகளுக்கு :
கடன் வாங்கி அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை...!
இது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி !
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications