Home
News

சுந்தர்பிச்சையை விசாரணை செய்த அமெரிக்கா பெண் எம்பியும் தமிழர் .!

அவரும் சுந்தரிடம் நானும் தமிழகத்தில் தான் பிறந்தேன் என்று பெருமிதமாக சுந்தரிடம் தெரிவித்தார். மேலும், அந்த வழக்கு விசாரணையில், சுந்தர் பிச்சைக்கு தமிழரா என்று பெரிய மகிழ்ச்சியும் இருந்தது.

அமெரிக்கா கூகுள் நிறுவனத்தின் மீது அடுக்காக பல்வேறு புகார்களை முன் வைத்தது. அப்போது விசாரணைக்காக தமிழரும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை வந்தார்.

அப்போது, அவரை பல்வேறு கேள்விகளால் துளைந்தது ஒரு அமெரிக்கா பெண் எம்பி ஆவார். அந்த எம்பி ஒரு தமிழர் எத்தனை பேருக்கு தெரியும்.

சுந்தர்பிச்சையை விசாரணை செய்த அமெரிக்கா பெண் எம்பியும்  தமிழர் .!

அவரும் சுந்தரிடம் நானும் தமிழகத்தில் தான் பிறந்தேன் என்று பெருமிதமாக சுந்தரிடம் தெரிவித்தார். மேலும், அந்த வழக்கு விசாரணையில், சுந்தர் பிச்சைக்கு தமிழரா என்று பெரிய மகிழ்ச்சியும் இருந்தது.

இருந்தாலும் அமெரிக்கா அதிகாரிகளின் கேள்விகளுக்க சற்றும் சளிக்காமல் பதில் அளித்தார் சுந்தர் பிச்சை இதுகுறித்து காணலாம்.

சீனாவில் புதிய சர்ச் இன்ஜின்:

சீனாவில் புதிய சர்ச் இன்ஜின்:

கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவது, சீனாவில் புதிய சர்ச் இன்ஜின் அறிமுகம் செய்ய இருப்பது, மற்றும் கூகுள் பயனாளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாப்பு குறித்து நிறைய குற்றச்சாட்டுகள் அமெரிக்க அரசு முன்வைத்தது.

அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு ஒன்று தங்களுக்கு எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் பொருட்டு கேப்பிட்டல் ஹில்லிற்கு பயணமானர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

தமிழ் பெண் எம்பி:

தமிழ் பெண் எம்பி:

நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் இருந்து கேட்கப்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் சுந்தர் பிச்சை. இதில் அதிசயக்கும் சம்பவம் என்னவென்றால் நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவரும் இடம் பெற்றிருந்தார் என்பது தான்.

ப்ரமிளா ஜெயபால் பெருமிதம்:

ப்ரமிளா ஜெயபால் பெருமிதம்:

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் 7வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரமிளா ஜெயபால். சுந்தர் பிச்சையிடம் கேட்பதற்கு இவரிடமும் கேள்விகள் இருந்தன.

தமிழர்களின் பெரிய பதவி:

தமிழர்களின் பெரிய பதவி:

ப்ரமிளா ஜெயபால் தன்னுடைய கேள்விகளை தொட்டங்குவதற்கு முன்பு "இந்த இடத்தில் நான் பெருமையாக ஒன்றை சொல்லிக் கொள்கின்றேன்.

நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிறந்து வளர்ந்தீர்களோ அதே மாநிலத்தில் தான் நானும் பிறந்தேன். இன்று உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகிக்கின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் மக்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் வெளிநாட்டினர் இந்நாட்டிற்கு அளிக்கும் பங்களிப்பு மகத்தானது.

விசாரணையின் நோக்கம்:

பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக இந்த விசாரணை இங்கு நடைபெற்று வருகிறது என்று கூறினார் ப்ரமிளா ஜெயபால். ப்ரமிளா ஜெயபால் (53) சென்னையில் பிறந்தவர். அமெரிக்காவில் படிப்பதற்காக மாணவராக அங்கு சென்றவர். சுந்தர் பிச்சையும் சென்னையில் பிறந்து ஐ.ஐ.டி காரக்பூரில் படித்துவிட்டு பின்பு 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், மற்றும் வெறுப்பினை வெளிப்படுத்தும் விதமான பேச்சுகள் குறித்து தன்னுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் விசாரித்தார் ப்ரமிளா ஜெயபால்.

வேலை செய்யும் இடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பினார் ப்ரமிளா ஜெயபால்.

More from GizBot

Best Mobiles in India

English summary
google CEO Sundar Pichai and Congresswoman Pramila Jayapal : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X