சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு.! எவ்வளவு தெரியுமா?
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை
நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79சதவீதவளர்ச்சியை அடைந்துள்ளதாக ஹூரன் ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2004-ஆகம் ஆண்டு சேர்ந்தார், பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக உள்ளார். மேலும் கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு 79சதவீதம் உயர்ந்து 5,900கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள ஹூரன் ரிச் லிஸ்ட் -ல் குறிப்பிடப்பட்டது என்னவென்றால்,பணக்கார இந்தியத் தலைவர்கள் பட்டியலில் (Top 10 Richest Indian Professional Managers list) கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை 5வது இடத்தைப்பிடித்துள்ளார்.

சுந்தர் பிச்சையைப் போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு 5,900கோடி ரூபாய் என்பதால் பணக்கார இந்திய தலைவர்கள் பட்டியலில் இருவரும் 5வது இடத்தை பகிர்ந்துள்ளனர். இருந்தபோதிலும் சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு இந்த வருடம் வெறும் 16சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தகவல்வெளிவந்துள்ளது.

இந்தஹூரன் ரிச் லிஸ்ட் -ல் 11,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போது கூகுள் கிளவுட் பிரிவின் சிஇஓ-வாக இருக்கும் தாமஸ் குரியன் அவர்கள் முதல் இடத்தில் உள்ளார். சுருக்கமாக சுந்தர் பிச்சை-யை விட அதிக சொத்து மதிப்புடையாவராகத் திகழ்கிறார் தாமஸ் குரியன் அவர்கள்.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர்கள் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு செய்த போது, அந்த இடத்திற்கு சரியான நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

எனவே இப்போது கூகுள் நிறுவனத்தின் இன்றைய வலிமையான வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு கைப்பற்றும் முடிவு ஆகிய இரண்டையும் சுந்தர் பிச்சை தலைமயில் எடுக்கப்பட்டதால் 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்களை 2014-ல் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications