மத்திய அரசும்-சுந்தர் பிச்சையும் நம்ம கிராமத்தை என்ன செய்ய போறாங்க தெரியுமா?
இவர்களின் சந்திப்பால் இந்தியாவுக்கு என்னென்ன நன்மைக் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் டிஜிட்டல் இந்தியாவில் திட்டத்தின்படி டிஜிட்டல் மயமாகி வரும் கிராமங்களுக்கு தான் இவை முக்கிய காரணியாக இ
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை மந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்கூகுள் நிறுவன தலைமையானமான உள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாக மாகாணத்தில் சந்தித்து பேசினர்.

இவர்களின் சந்திப்பால் இந்தியாவுக்கு என்னென்ன நன்மைக் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் டிஜிட்டல் இந்தியாவில் திட்டத்தின்படி டிஜிட்டல் மயமாகி வரும் கிராமங்களுக்கு தான் இவை முக்கிய காரணியாக இந்த சந்திப்பு இருக்கின்றது.

பாஜ அரசு பொறுப்பு ஏற்பு:
மத்திய அரசில் பாஜ அரசு பொறுப்பு ஏற்ற பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதில் பிரதமர் மோடியின் கனவு திட்டனமான டிஜிட்டல் இந்தியாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

டிஜிட்டல் இந்தியா:
டிஜிட்டல் இந்தியா என்பது இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களிலும் தகவல் உடனடியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அரசின் தலையாய கடமையாக இருக்கின்றது. இதையொட்டி அரசு அலுவலகங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டன் கீழ் செம்மைபடுத்தப்பட்டு வருகின்றது.

அதிவேக இன்டர்நெட்:
மத்திய அரசு சார்பில் பல்வேறு கிராமங்களிலும் தற்போது இலவச அதிவேக பை-பை இணைப்பு வழங்கப்படுகின்றது. மேலும் இதை விரைவாக நிறைவேற்றம் மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது.

6000 ரயில் நிலையங்களில் வை-பை இணைப்பு:
தற்போது 6000 ரயில் நிலையங்களில் விரைவில் அதிவேக வை-பை இணைப்பு வழங்கப்படும். இதனால் எளிதில் பொது மக்கள் ரயில்களின் நிலவரம் குறித்து அறியலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரயில் ஊழியர்களின் வேலைசுமையும் குறைக்கப்படும். மத்திய அரசு இதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

டிஜிட்டல் விவசாயம் மோடி பேச்சு:
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 72ம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி இனி விவசாயம் டிஜிட்டல் முறையில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளையும் அரசு டிஜிட்டல் மயமாகி வருகின்றது. இதற்கு அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்று நாள் சுற்றுப்பயணம்:
இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு மூன்று நாள் அலுவலக ரீதியான சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பிறகு கூகுள் தலைமை அலுவலகத்திற்கு அவர் சென்றுள்ளார்.

சுந்தர்பிச்சை- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு:
கலிபோரனியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்றார். பிறகு கூகுள் சிஇஒ சுந்தர்பிச்சை உடன் சந்தித்து பேசினார். பிறகு பல்வேறு தொழில் நுட்ப குழுவினருடனம் சந்தித்து பேசினார்.

டிஜிட்டல் இந்தியாவுக்கு உதவு வேண்டுகோள்:
இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்று பல்வேறு இதர திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நவீன விவசாயம்:
பிரதமர் மோடி உரையின்படி, நவீன விவசாயத்திற்காகவும் வானிலை குறித்த விவரங்களை இந்திய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூகுளிடம் மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications