சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!
அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொரோனாவினால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தன. குறிப்பாக கூகுள் நிறுவனமும் கொரோனா பரவல் காரணமாக தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி பணித்திருந்தது.

மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அவரவர் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டுமெனவும் சொல்லியிருந்தது. இந்த நிலையில் ஊழியர்கள் வரும் 2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.

குறிப்பாக மின்னஞ்சல் மூலம் தனது நிறுவன ஊழியர்களுக்கு அவர் தெரிவித்தது என்னவென்றால், வரும் ஜூன் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை நீட்டித்துள்ளோம் எனவும், இது உலகில் உள்ள அனைத்து கூகுள் அலுவலங்களுக்கும் பொருந்தும் எனவும்தெரிவித்துள்ளார்.

பின்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் ஊழியர்ளகள் கூகுளில் பணி செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் மும்பை, குர்கான், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் மாதிரியான நகரங்களில் கூகுள் அலுவலங்கள் செயல்பட்ட வருகிறது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் பாதிப்பு விகிதத்தை பொறுத்து அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications