ஓட்டுநர் மீது புகார்: ஆடைகளை கிழித்துவிடுவேன் என மிரட்டினார்: சிக்கலில் ஊபர்.!
பெங்களூருவில் அதிகமாக மக்கள் ஊபர் பயனத்தை தான் விரும்புகின்றனர், இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் வாடகை கார் நிறுவனமான ஊபர் மீது குற்றம் சாட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இரவு உணவுக்கு பிறகு..
சமூகவலைதளத்தில் அந்த பெண் பதிவிட்டது என்னவென்றால், ஊபர் நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார், பின்பு அவரின் சமூக வலைதளப் பதிவில் நான் இரவு உணவுக்கு பிறகு ஊபர் கார் முன் பதிவு செய்தேன்.

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தக் கூடாது..
அந்த ஓட்டுநர் நான் மிகவும் மோசம் என போனில் யாரிடமோ கூறினார், படித்த பெண்கள் எல்லாம் 7மணிக்கு முன்பாகவே வீட்டுக்கு செல்ல வேண்டும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்தார்.

பாதுகாப்புக்கான பட்டனை அழுத்தினேன்
பின்பு அந்த பெண் கூறியது நான் மது அருந்தவில்லை என்றும் உங்களது வேலையை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்,
அவர் தீடிரென காரை மெதுவாக இயக்கினார், நான் பயந்துபோய் ஊபரின் பாதுகாப்புக்கான பட்டனை அழுத்தினேன், ஆனால் ஊபரில் இருந்து ஓட்டுநருக்கே அழைப்பு சென்றது. நான் கடுமையான போதையில் இருப்பதாக ஓட்டுநரும் கூறிவிட்டார்.

கீழே இறங்கினால் ஆடைகளை கிழித்துவிடுவேன்
நான் வேறு வழியில்லாமல் அலறி எனக்கு உதவி வேண்டுமென கேட்டேன். அவர்கள் வேறு ஒரு காரை அனுப்புவதாகதெரிவித்தனர். ஆனால் காரைவிட்டு கீழே இறங்கினால் ஆடைகளை கிழித்துவிடுவேன் என ஓட்டநர் மிரட்டினார்.

தகவலை பதிவிட்டுள்ளார்
பின்பு ஊபரில் இருந்து எனக்கு உதவி கிடைக்கவே இல்லை என அந்த பெண் தெரிவித்தார். நான் என் நண்பர்களை உதவிக்கு அழைத்தேன், ஒரு அவசரத்தில் பாதுகாப்பு உதவிக்கான பட்டனை அழுத்தினால் பயனிக்கு தானே அழைபபு வரவேண்டும், ஆனால் ஓட்டுநருக்கு வருவது எப்படி பாதுகாப்பு ஆகும் என அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்பு போனில் பதிவான குறுந்தவல்களை சாட்சியாக அவர் இணைத்து இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications